கொசு ஒழிப்பு !

may 2, 2008

பெங்களூரு: கொசுக்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த புதுவகை நடைமுறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டி.ஆர்.டி.இ.,) கண்டுபிடித்துள்ளது. டி.ஆர்.டி.இ., அமைப்பின் வாழ்க்கை அறிவியல் மற்றும் மனித வள பிரிவின் தலைமை பொறுப்பாளர் செல்வமூர்த்தி கூறியதாவது: "லார்வா' என அழைக்கப்படும் முட்டைப்புழுக்கள், நீர் நிலைகளில் வெளிப்படுத்தும், பெரோமோனி ஹார்மோன் தான், பெண் கொசுக்கள் ஈர்த்து, முட்டைகளை இட வைக்கின்றன. பெரோமோனி ஹார்மோன் மற்றும் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளையும் ஒன்று சேர்த்து, "அட்ராக்சிசைட்' என்ற திரவத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த திரவத்தை, குறிப்பிட்ட நீர்நிலைகளில் தெளித்தால் போதுமானது. அந்த நீர்நிலைகளை தேடி வந்து கொசுக்கள் முட்டைகள் இடும். கொசுக்களின் இன பெருக்கம் குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். இந்த சோதனையை, அமைச்சரவை செயலர் பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையை நடத்திப்பார்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் கூறியுள்ளார். இந்த சோதனையை, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டில்லி மாநிலங்கள் ஏற்கனவே, நடத்த தொடங்கி விட்டன. சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அசாமில் தேஸ்பூர் என்ற இடத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சிக் கூடம், மூலிகை கொசு விரட்டியை கண்டுபிடித்துள்ளது. நோய்களை பரப்பும் கருவியாக, கொசுக்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஆராய்ச்சி நடக்கிறது. எனவே, மூலிகையை கொண்டு திரவ நிலையில் உள்ள கொசு விரட்டியும், கிரீமும் உருவாக்கப்படுகிறது. சாதாரண கொசு விரட்டி, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே பலன் தரும். ஆனால், மூலிகை கொசு விரட்டி, 12 மணி நேரம் பலன் தரும்; இது வடகிழக்கு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு செல்வமூர்த்தி கூறினார்.

காஸ் ஸ்டவ்

may 2,2008

பெங்களூரு: "ஐரோப்பிய மாடல் காஸ் ஸ்டவ் வாங்கலாமா?' என்று தான் நகரங்களில் உள்ள பெண்களின் சிந்தனை போகிறது. ஆனால், சுற்றுச்சழல் பாதுகாப்புக்கு உண்மையாக பாடுபடுபவர்கள் நாங்கள் தான் என்று கிராம பெண்கள் சாதித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேடாக உள்ளவையாக சில மாசுகளை, ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிட்டுள்ளது. அதில், நான்காவதாக உள்ளது "கார்பன்' வாயு தான். பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், இந்த வாயு மிக மோசமாக சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

இவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நகரங்களில் உள்ள மக்கள் அதில் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை. சூரிய சக்தி மின்சாரம் முதல் ஸ்டவ் வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல பொருட்கள் உள்ளன. இந்த வகையில், சமீபத்தில் சிறிய ஸ்டவ் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பெயர் "ஊர்ஜா' சிறிய ஸ்டவ் என்றாலும், காஸ் அடுப்பு போல எரியும். காஸ் சிலிண்டர் செலவை விட பாதி தான் செலவாகும். தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இந்த ஸ்டவ்வை பிரபலப்படுத்த கிராமங்களில் உள் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான "பிபி' சார்பில், இந்தியாவில் "பி.பி.,எனர்ஜி இண்டியா' என்ற நிறுவனம், இந்த ஸ்டவ்வை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அரசு உதவியோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போ இல்லை. கிராமங்களில் நேரடியாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரசாரம் செய்து, பெண்களை நியமித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள கிராமங்களில் 10 லட்சம் ஸ்டவ்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த நிறுவனம்.

இதற்காக, இந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மூன்றாயிரம் பெண் விற்பனை பிரதிநிதிகளை நியமித்துவருகிறது. ஸ்டவ்வின் விலை 675 ரூபாய். இந்த ஸ்டவ்வில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது, வேர்க்கடலை சருகுகள் உட்பட விவசாய மிச்சம் மீதிகளை காயவைத்து, தயாரிக்கப்படும் உருண்டைகள் தான். ஒரு மூட்டை எரிபொருள் உருண்டைகள் விலை 50 ரூபாய். கர்நாடக கிராமங்களில் இப்போது படுபிசியாக இந்த ஸ்டவ்வை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர். தமிழக கிராமங்களிலும் விரைவில் இந்த ஸ்டவ் விற்பனைக்கு வரும்.

ராஜா ராம் மோகன் ராய்

april 30, 2008

லண்டன் : பிரிட்டனில் அமைந்துள்ள, பிரபல சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் சமாதி, 165 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவில், சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன் ராய். பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில், 1833 ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அங்கு சமாதி அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ராய் மீது, இந்தியர் பலருக்கும் தனி மரியாதை உண்டு. அதனால், பிரிட்டன் செல்லும் போது, ராயின் சமாதிக்கு சென்று வருவர். கடந்த, 20 ஆண்டாக சமாதியை கவனிப்பாரின்றி சிதைந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த, இந்தியர்கள் பலரும் பிரிட்டன் அரசுக்கு மனு அனுப்பினர். ஆனால், பிரிட்டன் அரசு கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆதித்திய பொத்தார் என்பவர், 35 லட்சம் ரூபாய் நன்கொடை தந்துள்ளார். பிரிஸ்டல் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, ராயின் சமாதியை புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ராஜாராம் மோகன் ராய் சமாதியை புதுப்பிக்க 20 ஆண்டுக்கு பின் பணிகள் ஆரம்பமாக உள்ளன.சிங்கப்பூர் தொழிலதிபர், கோல்கட்டாவை சேர்ந்தவர். ராயின் மீதுள்ள மதிப்பால் அவர் நன்கொடை தந்துள்ளார்.பிரிஸ்டலில் உள்ள ராய் சமாதியில், அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது உருமாறி உள்ளது. மேற்கு வங்க பாரம்பரிய முறைப்படி இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதையும் புதுப்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கம்

அலகாபாத்: உ.பி., மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொடுத்தனர். உ.பி., மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் குலாம் முகமது. இவரது மனைவி ரஷிதா பேகம். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்களுக்கு, பெண் குழந்தை இல்லை. இதனால், 14 ஆண்டுகளுக்கு முன், சரீந்தர் யாதவ் என்ற இந்து மதத்தை சேர்ந்தவரின் பெண் குழந்தையை, தத்தெடுத்து வளர்த்தனர். அந்த குழந்தைக்கு பபிதா என பெயரிட்டு, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். காலச் சக்கரம் வேகமாக உருண்டோடியது. பபிதாவிற்கு திருமண வயது வந்தது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது, அவர்களுக்கு புதுக் குழப்பம் ஏற்பட்டது.

பபிதாவிற்கு, முஸ்லிம் மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, என்பதே அந்த குழப்பம். இறுதியில், இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பது என முடிவு செய்தனர். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமடைந்தது. ஆனால், குலாம் முகமது நினைத்தது போல், அது, அத்தனை எளிதான காரியமாக இல்லை. முஸ்லிம் வீட்டில் வளர்ந்த பபிதாவை, திருமணம் செய்ய, இந்து மதத்தினர் தயக்கம் காட்டினர்.
இறுதியில், பராவுலி கிராமத்தை சேர்ந்த கங்கா பிரசாத் யாதவ் என்பவர், தனது மகன் பப்லுவுக்கு, பபிதாவை திருமணம் செய்ய முன்வந்தார். திருமண வேலைகள் வேகமாக நடந்தன. முழுக்க முழுக்க, இந்து மத சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகையின் அட்டையில், விநாயகர் படத்தை அச்சிட்டு, தனது உறவினர்களுக்கு வினியோகம் செய்தார், குலாம் முகமது.
இந்துமத சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது. முஸ்லிம்-இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வந்திருந்ததால், திருமணப் பந்தல் நிரம்பி வழிந்தது. திருமணம் முடிந்து, பபிதாவை மாப்பிள்ளை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் போது, குலாம் முகமது-ரஷிதா பேகம் தம்பதியினர், பிரிவுத் துயர் தாங்காது, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி குலாம் முகமது கூறுகையில்,"இது, எனது மகளின் திருமணம். ஒரு தந்தை, தனது மகளுக்கு, செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ளேன். இதை, புதுமையாக நான் கருதவில்லை' என்றார். சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த திருமணத்திற்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
நன்றி தினமலர்.காம்

மூங்கில்

Posted by Picasa

நன்றி தினமலர்

தொழிலாளியின் சமூக சேவை!

Posted by Picasa


நன்றி தினமலர்

இப்படி ஒரு துணை முதல்வர்!

Posted by Picasa


நன்றி தினமலர்

வறுமையில் செம்மை!

Posted by Picasa

நன்றி தினமலர்

துளசி

Posted by Picasa


நன்றி: தினமலர்.காம்

வீட்டை உடனே காலி செய்த மாஜி அமைச்சர்

அமைச்சர் நாராயணசாமிக்கு கிடைத்துள்ள மத்திய திட்டத்துறையை, இதற்கு முன், ராஜசேகரன் என்பவர் கவனித்து வந்தார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்து விட்டது. மீண்டும் எம்.பி.,பதவி வழங்கப்படவில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் மருமகனான இவர், தனக்கு எம்.பி., பதவி வழங்கப்படவில்லை என்றதும் மறுநாளே டில்லியில் உள்ள வீட்டை காலி செய்து பொருட்களை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், தனது வீட்டுச் சாவியை இன்று அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்க இருக்கிறார். பதவி இழந்த உடனேயே அமைச்சர் ஒருவர் வீடு காலி செய்வது அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்.காம்