லண்டன் : கடந்த 17ம் நூற்றாண்டில், ராமாயணத்தை சித்தரித்து வரையப்பட்ட, அழகு மிளிரும் ஓவியங்கள், தற்போது, லண்டனில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேவாரைச் சேர்ந்த ராணா ஜகத் சிங் என்பவர், ராமாயண புராணக் கதையை சித்தரிக்கும், உயிரோட்டமுள்ள, அரிய வகை ஓவியங்களை வரைந்துள்ளார். இவை, 17ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை. இந்த ஓவியங்கள் அனைத்தும், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நூலக புரவலர் பிர்லா என்பவரின் உதவியுடன், லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. உலகின் அரிய வகை ஓவியங்கள் மற்றும் கலை ஆகியவை, பிரிட்டிஷ் நூலகத்தில் கண்காட்சிகளாக இடம் பெறுவது வழக்கம். இந்த பெருமை, மேவாரில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமாயண ஓவியங்களுக்கும் கிடைத்துள்ளது. "இந்தியாவின் பெருமை மிகு இதிகாசம் ராமாயணம்' என்ற தலைப்பில், உயிரோட்டமுள்ள, இந்த ஓவியங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் வகையில், ஸ்லோகங்களும், கண்காட்சியில் ஒலிபரப்பப்படுகிறது. வரும், செப்டம்பர் 14 வரை, இந்த கண்காட்சி நடக்கிறது.
செவ்வாய், மே 20, 2008
அரிய ஓவிய கண்காட்சி
பதித்தவர்
திவாண்ணா
இந்த நேரத்தில்
செவ்வாய், மே 20, 2008
குறிச்சொற்கள் ஊடகத்தில் நல்ல சேதி
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment