வலைப்பூக்களுக்கு புதுசுனா

சரி எப்படியோ இங்க வந்துட்டீங்க. கொஞ்சம் தலைகால் புரியலே இல்ல?
ஏதேனும் படிக்கிறீங்க. அட, இது நல்லாயிருக்கேன்னு தோணுது. (சும்மா ஒரு பேச்சுக்குதான்!) அத பத்தி ஒரு விமர்சனம் எழுத தோணுது. (ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையா, ஐயா நான் பார்த்த வலைப்பூக்களிலேயே இதுதான் பிரமாதம்! இப்படி ஏதோ ஒண்ணு) என்ன செய்யறது?
நீங்க படிச்ச பத்தி கீழேயே காமென்ட்ஸ் அப்படி தெரியுது பாருங்க. அது மேலே சொடுக்கினா (அதாங்க மவுஸால கிளிக் பண்ணா) அடுத்து ஒரு பக்கம் வரும். மத்தவங்க திட்டினது பாராட்டினது எல்லாம் அங்க இருக்கும். அது பாட்டுக்கு வால் மாதிரி (க்கும்) போய்கிட்டே இருந்தாலும் கவலைபடாம வலது பக்கம் பாருங்க. அங்க ஒரு பெட்டி தெரியுதா? மேலே ஆங்கிலத்துல லீவ் யுவர் காமென்ட்ஸ் அப்படி போட்டிருக்கே. அந்த பெட்டில உங்க விமர்சனத்தை உள்ளிடுங்க. தமிழ்ல எழுதறது நல்லது. அதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். முதல் பக்கமே தமிழில் தட்டச்சி பின்னூட்ட ன்னு ஒரு தொடுப்பு கொடுத்திருக்கேனே. அங்க போய் சுலபமா தமிழ்ல எழுதலாம். ammaa ன்னு அடிச்சா "அம்மா" வந்துடும். அப்புறம் அத பிரதி எடுத்து ஒட்ட... அதாங்க காபி பேஸ்ட் .. பண்ணிடலாம்.
மத்தபடி இடது பக்கம் முதல்ல என் இன்னொரு வலைப்பூக்கான தொடுப்பு, கீழே இந்த வலைப்பூல இருக்கற மத்த பதிவுகள் தலைப்புவாரியாக, ஏன் இந்த வலைப்பூ ங்கற ரகசியம், இன்னும் கீழ இதுவரை பதிவு செய்தன் எல்லாம் தேதிவாரியாக, அப்புறம் அடியேனின் சிறு விவரம். அவ்வளவுதாங்க. இதுவரைக்கும் படிச்சதுக்கு நன்றி!

நல்ல தொடுப்பு

http://tinyurl.com/34u7q7பு
வலைப்பக்கம் ஆங்கிலத்தில். உற்சாகம் தரும் சில நிகழ்வுகள்.

இந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள்

எல்லா செய்திகளுக்கும் ஒரு அத்தாட்சி வேண்டும். தினசரி மற்ற ஊடகங்களானால் வலை தொடுப்பு இருப்பின் சமர்ப்பிக்கவும். அல்லது "தினமலர் 12-1-2007 தேதி நெல்லை பதிப்பு" போன்ற தகவல் இருக்க வேண்டும். சமர்ப்பிக்கும் செய்தி உண்மையானது என உறுதி கூற வேண்டும்.
தரப்படும் தகவல் தணிக்கைக்கு உட்பட்டது. தணிக்கைக்கு சம்மதம் இல்லையானால் சமர்ப்பிக்காதீர்கள்.
தணிக்கைக்கு காரணம் தரப்பட மாட்டாது.
தரப்படும் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று உறுதி ஏதும் இல்லை. இதற்கு காரணமும் தரப்பட மாட்டாது.
வெளிட்ட தகவல் தவறு என தெரிய வந்தால் அது நீக்கப்படும்.
வெளியிட உங்கள் புனை பெயர்களை தரலாம், ஆனால் உண்மை பெயரும் தரப்பட வேண்டும்.
இந்த சமர்ப்பிப்போர் பெயர் தேவையிருந்தால் மட்டுமே வெளியிடப்படும்.

இந்தியா ஒளிர்கிறது!

இந்த தலைப்பு நிறைய பேருக்கு பிடிக்காதது என்று தெரியும். ஆகவே முதலில் இது எந்த கட்சியை சார்ந்தும் இல்லை என்று சொல்லி விடுகிறேன்.

நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன.
துரியோதனன் போல கெட்டதையே பார்க்கலாம்.
அல்லது தருமன் போல நல்லதையே பார்க்கலாம்.
அல்லது எதார்த்தமாக பார்க்கலாம்.

ஊடகங்கள் வியாபாரமாக இயங்க மக்களின் மலினமான உணர்வுகளுக்கு தீனி போடுகின்றன. அப்போதுதானே நிறைய பேர் படிப்பார்கள்! அதனால் அவை தரும் செய்திகள் ஒரு மாதிரிதான் இருக்கும்.

எதார்த்தமாக பார்க்கும்போது நாம் பல விஷயங்களில் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றுக்கு அரசாங்கங்கள் காரணம் என்று குறை சொல்ல முடியாது. முன்னேறம் மக்களால்தான் ஏற்படுகிறது. அரசுகள் ஒரு ஊக்கியாக மட்டுமே இருக்க முடியும். முன்னேற மக்களுக்கு முதலில் ஒரு தன்னம்பிக்கை தேவை. "ப்ளடி இன்டியா" என்று நினைக்கும்வரை நாம் முன்னேற முடியாது. அதற்குத்தான் இந்த தலைப்பு.

தப்பித்தவறி ஊடகங்களில் சில நல்ல விஷயங்கள் வந்து விடுகின்றன. இவை இந்தியாவின் ஏதோ ஒரு அங்கம் முன்னேறியதை காட்டும். அவற்றையும்தான் தெரிந்து கொள்ளலாமே!

--------------
வெளி நாடுகளில் இருந்து இந்தியா எல்லாவற்றையும் இறக்குமதி செய்த காலம் போயே போச்! திசம்பர் 12 ஆம் தேதியிட்ட செய்திகள் மஹீந்திரா ஸ்கார்ப்பியோ வண்டிக்கு வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 285 இடங்களில் அவை விற்கப்பட உள்ளன. 45,000 வண்டிகளுக்கு இப்போதே ஆர்டர்கள் உள்ளன.

நல்ல அனுபவம்!

சில வருடங்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்தது.
என் மகனை சென்னையில் தனியாரிடம் கல்வி பயில சென்னை கொண்டு அமர்த்தினேன். ஒரு சிறு உறைவிடம் வாடகைக்கு எடுத்தோம். மாலை கடையில் பொருட்கள் வாங்கி அதிகம் பழகாத மகனுக்கு ஒரு அனுபவம் வருவதற்காக மயிலை குளத்தருகே கடை வீதி சென்றோம். காய்கறி வாங்க தெருவோரம் இருந்த ஒரு எளிய கிழவியிடம் சென்று அமர்ந்தோம். பெரிசா விலை பேசி வாங்க தெரிந்தவன் போல "இது எவ்வளோ? அது எவ்வளோ" என்றெல்லாம் விசாரித்தோம். கடைசியில் தேவையான அளவு காய்கறி எடுத்துக்கொடுத்து "எடை போட்டு கொடுமா" என்றோம். (எவ்வளவு வேண்டும் என்று எடையில் சொல்லத் தெரியாதே!) சரி எவ்வளவு ஆச்சு? என்றோம். அதற்குள் மனசில் கணக்கு போட்டு 15 ரூபாய் வந்தது என்று தெரிந்து விட்டது. "பதினஞ்சு ரூபா சாமி." 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினோம். கிழவி மீதியாக 8 ரூபாய் கொடுத்தாள். ஓ கணக்கு தெரியவில்லையோ? எப்படிமா என்று ஆரம்பிக்க கிழவி சிரித்துக்கொண்டே "இது போதும் சாமி!" என்றாள்!
கணக்கு தெரிந்துதான் இருக்கிறது. எப்படியும் பேரம் பேசுவார்கள் என்று விலையை சற்று உயர்த்தி சொன்னாள். பேரம் பேசவில்லை என்று தெரிந்ததும் அவள் மனதில் நிர்ணயித்து இருந்த விலை மட்டும் எடுத்துக் கொண்டாள். கூடுதலாக கிடைக்க இருந்த பணத்தை ஏற்க தயாராக இல்லை.
ஏழ்மையிலும் செம்மை!