குறைந்த செலவிலான ராக்கெட் எரிபொருள்

கொச்சி : குறைந்த செலவிலான, ராக்கெட் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரைவிட, குறைவான செலவில் ராக்கெட் எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு, திரவ நிலை எரிபொருளும், திட நிலை எரிபொருளும் பயன்படுத்தப்படுகின்றன.

கிரயோஜெனிக் எரிபொருள் இன்ஜின் வடிவமைப்பதில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பகுதி கிரயோஜெனிக் தொழில்நுட்பம், ராக்கெட் செலுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.இந்த எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படுகிறது. கிரயோஜெனிக் இன்ஜின்களில் திரவநிலை ஹைட்ரஜன் மற்றும் திரவ நிலை ஆக்சிஜன் நிரப்பப்பட வேண்டும். திரவநிலை ஹைட்ரஜன் நிரப்புவது பெரும் சிரமமான காரியமாக உள்ளது.

இதற்கு பதிலாக, மண்ணெண்ணெய் மற்றும் திரவநிலை ஆக்சிஜன் மூலம் உருவாக்கப்படும் லாக்ஸ்-கெரசின் என்ற எரிபொருளை, இன்ஜினில் நிரப்புவதும் எளிது; செலவும் மிகக்குறைவு.மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 18 ரூபாய். திரவ நிலை ஆக்சிஜன் ஒரு லிட்டர் ஆறு ரூபாய். லாக்ஸ் - கெரசின் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவு ஏற்படும். திட நிலை எரிபொருள் ஒரு கிலோவுக்கு 1,500 ரூபாய் செலவு ஏற்படுகிறது.லாக்ஸ் - கெரசின் எரிபொருள் தயாரிப்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருந்தாலும், இதை மேலும் நுட்பமாக கையாள்வது குறித்து உக்ரைன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் உக்ரைன் பங்குதாரராக இல்லாவிட்டாலும், பழைய சோவியத் ரஷ்யா கையாண்ட தொழில்நுட்ப முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர்.புதிய எரிபொருள் தயாரிப்பு முழு வெற்றி பெற் றால், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் செலவு பெரிதும் குறையும். 2012ம் ஆண்டை இலக்காக வைத்து, மறுபயன்பாட்டுக்கு தயாரிக்கப்பட்டு வரும் ராக்கெட்டிலும், இதை பயன்படுத்த முடியும்.

கடற்பாசியில் இருந்து...

-வாஷிங்டன்: வானிலை மாற்றத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல், சுற்றுச்சூழலை பாதிக்காத "பயோ' எரிபொருள் உற்பத்தி செய்யவும் கடற்பாசி பயன்பட உள்ளது!காட்டாமணக்கு உட்பட, பல தாவரங்கள் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள இயற்கையான மாற்று எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. இந்தியாவும் இது போன்ற திட்டங்களில் இறங்கியுள்ளன. கோஸ்ட்டா ரிகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்போது, கடற்பாசியில் இருந்து மாற்று எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.கடற்பாசி உற்பத்தி, கடந்த 1950 ல் இருந்து 60 மடங்கு பெருகியுள்ளது. ஆசிய, பசிபிக் கடலில் இருந்து தான் இதன் 91 சதவீத உற்பத்தி கிடைக்கிறது. ஆண்டுக்கு எட்டு கோடி டன் கடற்பாசி ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடற்பாசியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், "பயோ' எரிபொருள் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடற்பாசி இப்போது உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிராணிகளுக்கு இரையாகவும் , விவசாயத்துக்கு உரமாகவும் கூட பயன்படுத்தப் பட்டு வருகிறது.இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில்," பல நாடுகளில் கடலில் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, கடல் வளம் குறைவதுடன் அதன் பயன்பாடும் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடல் வளம் பாதிக்காத நிலையில் கடற்பாசியை வளர்த்து அதன் மூலம் எரிபொருளை உற்பத்தி செய்தால் எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க முடியும். உலக வெப்பமயமாதலை குறைக்க முடியும்' என்று தெரிவித்தனர்.

தண்ணீரே தேவையில்லாத வாஷிங் மிஷின்

இப்படியும் இருக்குமா என்ன? உண்மையான்னு பாக்கணும்!
உண்மைதான்http://tinyurl.com/6m5clzபாருங்க
-----------
11/6/2008
தண்ணீரே தேவையில்லாத வாஷிங் மிஷின் அறிமுகம்

லண்டன்:தண்ணீரே தேவைப்படாத வாஷிங் மிஷின்கள், பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிரிட்டன் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம். தற்போது பிரிட்டன்வாசிகள், சராசரியாக ஒரு நாளுக்கு 21 லிட்டர் தண்ணீரை, துணிகளை சலவை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு உபயோகத்துக்காக, பயன்படுத்தும் தண்ணீரில் 13 சதவீதம் சலவை செய்வதற்காக பயன்படுத்தப் படுகிறது.பிரிட்டனில், வாஷிங் மிஷின்கள் தான் பெரும்பாலும் சலவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஆண்டுதோறும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சத்துக்கு மேற்பட்ட வாஷிங் மிஷின்கள் விற்பனையாகிறது. தற்போது நடைமுறை யில் உள்ள வாஷிங் மிஷின்களில், ஒரு முறை, ஒரு கிலோ எடையுள்ள துணியை சலவை செய்ய, 35 கிலோ தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள வாஷிங் மிஷின்களில், இதில் வெறும் 2 சதவீதம் தண்ணீரும், மின்சாரமும் போதுமானது। இந்த வாஷிங் மிஷின் களை, ஜீரோஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு முறை சலவை செய்ய ஒரு கப் தண்ணீர் போதுமானது. இதில் உள்ள பிளாஸ்டிக் சிப்கள், துணிகளில் உள்ள கறைகள், அழுக்குகளை அகற்றி, உலர்த்திவிடும். தனியாக உலர்த்த வேண்டிய தேவை இல்லா ததால், டிரையர் தேவையில்லை. இதனால், டிரையருக்கு தேவைப்படும் மின்சார செலவும் மிச்சமாகிறது.சாதாரண வாஷிங் மிஷின்களுக்கும், புதிய வாஷிங் மிஷினுக்கும் விலை யில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக பிரிட்டன் முழுவதும், புதிய வாஷிங் மிஷின்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
--
20கிலோ சிப் போடணுமாம்। சிப்களை 100தரம்திருப்பி பயன்படுத்தலாமாம்। அதாவது 6மாசத்துக்கு ஒரு முறை

இதய நோய் மருத்துவத்தில்....

11/6/2008
சென்னை: கால்நடைகள், பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் வால்வுகள், ரத்த குழாய்கள், நரம்புகள், திசுக்கள் போன்றவை, மனிதர்களின் இதய நோயை குணப்படுத்த, நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் செயல்பட்டு வரும் பிரான்டியர் லைப் மருத்துவமனை டாக்டர்கள் குழு, இதில் 100 சதவீதம் வெற்றி பெற்று வருகின்றனர். மனித இதயங்களில் சில பகுதிகளை மாற்ற முடியாத சிக்கல்கள் உள்ளன. செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிந்தடிக் ரத்தநாள குழாய்கள் பொருத்தப் பட்டால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்ப நேரிடுகிறது.

இதனால், பிரான்டியர் லைப் மருத்துவக்குழுவினர் கால்நடைகளின் ரத்த குழாய்கள், வால்வுகள், நரம்புகள், திசுக்களை பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள இரண்டு அதிநவீன, சுகாதாரம் மிக்க இறைச்சிக் கூடங்களுக்கு டாக்டர்கள் குழுவினர் செல்கின்றனர். அங்கு வெட்டப்படும் எருமைகளின் கழுத்துப்பகுதியில் உள்ள தொண்டை நரம்பை கவனமாக பிரித்து எடுக்கின்றனர். பன்றிகளில் உள்ள பல்மொனரி ரத்தக் குழாய்களையும் பிரித்துஎடுக்கின்றனர். இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் சவ்வையும் எடுக்கின்றனர். இவற்றை மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் விசேஷ கரைசலில் ஊற வைக்கின்றனர். இதன் மூலம், கிருமி தொற்று ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதில் மனித செல்களும் சேர்க்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் இந்த ரத்தக்குழாய்கள், தொண்டை நரம்பு, பெரிகார்டியம் ஆகியவை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில், ஆட்டுக்கு பொருத்தி பரிசோதிக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமானோர், நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மொனரி ரத்தக்குழாய் இல்லாமலேயே பிறக்கின்றனர். இவர்களுக்கு பல்மொனரி ரத்தக்குழாய் பொருத்தப்படுவது அவசியம். இவ்வாறு மனிதர்களுக்கு பொருத்தப்படும் ரத்தக்குழாய்கள், இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் இரட்டை சுவர் சவ்வு, போன்றவற்றில் ரத்த உறைதல், வேறு திரவ சுரப்பு போன்றவை மூன்று மாதத்துக்குள் ஏற்படாது. எனவே, இவற்றை வால்வுகளுடன் வெற்றிகரமாக முடிகிறது. பிரான்டியர் லைப் மருத்துவமனையில் இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப் பட்டுள்ளன. ஒரே ஒருவரை தவிர, எல்லாருக்கும் இவை வெற்றிகரமாக பொருத்தப் பட்டு செயல்பட்டு வருகிறது. மத நம்பிக்கை கொண்டவர்கள் பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் ரத்தக்குழாய்கள் பொருத்தப்படுவதை விரும்புவது இல்லை. இதற்கு பதிலாக, எருமைகளில் இருந்து எடுக்கப்படும் கழுத்து நரம்புகள் வெற்றிகரமாக பொருத்தப்படுகின்றன.

பறவை நேயம்!

லண்டன்: மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ற பழமொழி, பறவைகளுக்கு பொருந்தாது. தாய்ப் பறவை கற்றுக்கொடுத்தால் மட்டுமே, குஞ்சுகள் பறக்கப் பழகும். தாயை இழந்துவிட்டால்... அதற்கு யாராவது கற்றுக்கொடுக்காவிட்டால், பறக்கத் தெரியாது. இப்படிப்பட்ட நாரைக்கு பறக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கேரி ஜாமித் என்ற பறவை ஆர்வலர். பயங்கர சூறாவளியால், நாரை குடும்பம் ஒன்று கூண்டோடு பலியாகிவிட்டது. அதில், ஒரு குஞ்சு மட்டும் பிழைத்துக் கொண்டது. அதை அன்போடு எடுத்து வந்தார், பறவை ஆர்வலர் கேரி ஜாமித். நாரைக்குஞ்சுக்கு தாய் இல்லாததால், அதற்கு பறப்பது எப்படி என்று தெரியாது.


அந்த நாரைக்குஞ்சுக்கு டியூட் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் ஜாமித். டியூட்டுக்கு பறக்கக் கற்றுக்கொடுக்க தினமும் குறிப்பிட்ட நேரம் செலவிட்டார். மெல்ல ஓடி, பிறகு வேகம் பிடித்து, கையை இறகு போல படபடத்து கற்றுக்கொடுத்தார் ஜாமித். இதைப் பார்த்த டியூட்டும், மெல்ல நடந்து, பின் ஓடி, இறகுகளை அடித்து பறக்க முயன்றது. சில நாட்களில், இந்த பயிற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஜாமித்துயுடன் ஓடிய நாரை, மூன்றடி உயரத்துக்கு பறந்தது. பழகப்பழக, பறக்கும் திறன் வந்துவிட்டது. இப்போது 70 அடி உயரத்துக்கு பறக்கிறது டியூட். விரைவில் இதை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட உள்ளார் ஜாமித்.

கோமா பாட்டி மீண்ட செய்தி

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
--------------


லண்டன்: ஏதோ ஒரு காரணத்தால், தலையில் அடிபடும் போது, சுயநினைவை இழக்கும் பரிதாபம் பலருக்கும் ஏற்படத்தான் செய்கிறது। கோமா நிலைக்கு சென்றுவிடும் காலகட்டத்தில், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியவர்கள் அரிதாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டனில், சாலை விபத்தில் சிக்கி, கோமா நிலைக்குச் சென்ற பெண்ணை, மீண்டும் சுய நினைவிற்கு கொண்டு வந்துள்ளார் அவரது பேத்தி.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; வடக்கு லண்டன், நீஸ்டன் பகுதியை சேர்ந்தவர் தேவ்பாய் பட்டேல் (56). இந்தியாவைச் சேர்ந்த இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே தேவ்பாய் பட்டேல் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி, இவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். படுகாயமடைந்த தேவ்பாய் பட்டேல், மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவ்பாய் பட்டேல் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். மேலும், தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இருப்பினும், சுய நினைவுக்கு பட்டேல் திரும்பவில்லை.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டேலை பார்ப்பதற்காக அவரது பேத்தி லீலாவை, தாத்தா குன்வெர்ஜி அழைத்து சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் பாட்டியை பார்த்த லீலா, தன்னையும் மறந்து ஓ... வென்று கதறினார். அப்போதுதான், அந்த அதிசயம் நடந்தது, டாக்டர்கள் பேச்சு கொடுத்தும், எழுப்ப முயன்றும் எதுவுமே பயன் தராத நிலையில், தனது பேத்தியின் கதறல், பாட்டியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. கண் விழித்துப் பார்த்த பட்டேல், தனது பேத்தியை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த அதிசய காட்சியைப் பார்த்த டாக்டர்களால், தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. இது மருத்துவ உலகில் நடந்த அதிசயம் என்று வியந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டேல், இப்போது நலமாக இருக்கிறார்

தூய்மையான கிராமம்

இது போதாது, இன்னும் எவ்வளவோ தூரம் போகனும் இல்லையா?
-----------

ஷில்லாங்: பொது இடங்களிலேயே குப்பையை கொட்டுவது, சாக்கடைகளை தூய்மை படுத்தாமல் அப்படியே விட்டு விடுவது, போன்ற செயல்கள் அதிகம் அரங்கேறிவரும் காலத்தில், சுற்றுப்புற தூய்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம். மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம், தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 75 கி.மீ., தூரத்தில், ஜெயின்தியா மலை மாவட்டத்தில் உள்ளது. சுத்தம் என்பதற்கு இலக்கணமாக திகழும், இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் மூங்கிலால் செய்யப் பட்ட குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பள்ளத்தில் கொட்டப்படுகின்றன. இதில் தரம் பிரிக்கப்படும் மக்கும் குப்பையைக் கொண்டு உரம் தயாரித்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, அந்தக் கிராமத்தின் தலைவர் தாம்லின் கோங்கோத்ரெம் கூறியதாவது :பரம்பரை பரம்பரையாகவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்ததன் விளைவாகத்தான் இந்தக் கிராமம், தூய்மைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. சுமார், 450க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், யாருக்கும் குடிப்பழக்கம் என்பது கிடையாது. இதனால், இயல்பாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது மட்டுமின்றி, கால்நடைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இங்குள்ளவர்களிடையே இயல்பாக ஏற்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும், இப்போதுள்ள சுற்றுப்புற சூழல் கிடைக்க வேண்டும் என்பதில் கிராம மக்கள் மிகவும் உறுதியுடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், மே மற்றும் ஜூன் மாதங்களில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த கிராமம், ஆசியாவின் தூய்மையான கிராமமாக கடந்த 2003ம் ஆண்டு தேர்ந் தெடுக்கப்பட்டது. சுற்றுப்புற தூய்மைக்கு உதாரணமாக திகழும் இந்தக் கிராமத்தில், பொது இடங்களில், குப்பையை கொட்டும் நபர்கள் தண்டிக்கப்படுவதில்லை . தண்டிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; வெளியூர்க் காரர்கள் குப்பைகளை தெரியாமல் பொது இடத்தில் வீசும் பட்சத்தில், யார் அதனை முதலில் பார்க்கிறார்களோ, அவர்களே அதை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுவர். இங்குள்ள நீரோடைகளில் ஓடும் தண்ணீர் கண்ணாடியைப் போல் பளபளப்பாக மின்னுவதால், எந்தவித தயக்கமுமின்றி தண்ணீரை அப்படியே குடிக்கலாம். இந்த கிராமம், சுற்றுலாத் தலமாக உருவாகிவருகிறது. அதிகம் பேர் வந்து தங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிராணி நேயம்

அதென்னங்க எப்ப பாத்தாலும் மனித நேயம்? இங்க பிராணி நேயம் பாருங்க!
--------------

கர்நூல்: அரசாங்க ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது। இதேபோன்று மனிதர்களுக்காக உழைக்கும் வாயில்லா பிராணிகளான எருதுகளுக்கும் வாரத்தில் ஒருநாள் திங்கட் கிழமை விடுமுறை அளித்து இங்குள்ள விவசாயிகள் பிராணிகள் நேயத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.


ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் ஆலஹர்வி அருகே விருபாபுரம் அடுத்த பலுகோட கிராம விவசாயிகள் வாரத்தில் ஒருநாள் இப்படி ஓய்வு அளிக்கின்றனர். இந்த கிராமத்தில் பசவேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக எழுந்தருளியுள்ள பசவேஸ்வர சுவாமியின் (நந்தி எருது) வாகனமான எருதுகளை கிராமத்தின் எல்லையில் உள்ள ஏரிக்கு ஓட்டிச் சென்று ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமையன்று தண்ணீரில் குளிப்பாட்டி சுத்தம் செய்கின்றனர். பின்னர், ஏரியிலிருந்து எருதுகளை குழந்தை குட்டிகளுடன் இங்குள்ள பசவேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்கின்றனர். இந்த கிராமத்து விவசாயிகள் அனைவரும் இந்த முறையை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். நிலத்தில் விதை விதைக்க வேண்டுமென்றால் கூட திங்கட் கிழமை ஏர் கட்ட மாட்டார்கள். மேலும், இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மது அருந்தி விட்டால் கோவில் அருகில் செல்ல மாட்டார்கள். திங்கட் கிழமை அன்று கிராம மக்கள் யாரும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். இதுபோன்ற கிராம கட்டுப்பாட்டினால் தங்கள் விளை நிலத்தில் நல்ல விளைச்சல் காண்பதாக, இந்த கிராம மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தலை வழுக்கை -க்ளோனிங்

இது உடனேயே சகாய செலவில் வராதுதான்! இருந்தாலும் ஒரு வழி வந்திகிட்டு இருக்கு। கொஞ்சம் நம்பிக்கையோட இருக்கலாம்!
--------
லண்டன்: தலை வழுக்கையாகி விட்டதே என்று இனி கவ லைப்பட வேண்டாம்; இதுக் கும் குளோனிங் சிகிச்சை முறை வந்து விட்டது।தலை முடி உதிர்வதற்கும், வழுக்கையாவதற்கும் பல காரணங்கள் உண்டு। சில நோய்கள் காரணமாக கூட முடிகள் உதிரும்.மரபு வழியாகவும் வழுக்கை ஏற்படும்; ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையினரில் சிலருக்கு வழுக்கை ஏற்பட் டால், மூன் றாவது தலைமுறையில் உள்ள சிலருக்கு வழுக்கை வரலாம். இப்படி பல காரணங் களால் ஏற்படும் வழுக்கை தீரவும் இப்போது நவீன சிகிச்சை முறை வந்துவிட்டது.

இன்டர்சைடெக்ஸ் முறை: உடலில் ஏற்படும் கோ ளாறுகளுக்கு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை உள்ளது போல, தலைமுடிகளை மீண் டும் உருவாக்கவும், நகல் எடுக் கும் முறை வந்துவிட்டது. ஒன்றை போலவே இன் னொன்றை உருவாக்கும் மருத்துவ முறை தான் குளோனிங் என்பது. முதன் முதலில் ஆட்டின் செல்லில் இருந்து, அதைப் போலவே இன்னொரு ஆட்டை செயற்கை முறையில் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்தனர். இந்த குளோனிங் முறை இப்போது தலைமுடிகளை உருவாக்குவதற்கும் வந்துவிட்டது.


பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த இன்டர்சைடெக்ஸ் என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்த முறையை வர்த்தக ரீதியாக செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. விஞ்ஞானிகள் ஆராயச்சிக்கு பின் வர்த்தக ரீதியாக பயன்படுத்த உள்ள இந்த முறைக்கு, "பாலிகியூலர் செல் இம்ப்ளேன்டேஷன்' என்று பெயர். தலையில் அடித்தோலில் முடி வேர்களை இழப்பதால் தான் வழுக்கை ஏற்படுகிறது.


இதனால், மீண்டும் முடிகளை வளர்க்க குளோனிங் முறையில் நடவடிக்கை மேற் கொள்ள முடியும். தீயினால் முடிகள் இழப்பு, நோயினால் முடி கொட்டுவது போன்ற காரணங்களால் வழுக்கை ஏற்படுவோருக்கும் இந்த நவீன சிகிச்சை முறை கைகொடுக்கும்.தலையில் உள்ள செல்களில் செய்யப்படும் இந்த புது முறை சிகிச்சையில், மயிர்க் கால்களில் இருந்து புதிய முடிகள் உருவாக்கப்படுகிறது. வழுக்கை ஏற்பட்ட ஐந் தாண்டுக்குள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் முடிகளை மீண்டும் வளர்த்துக் கொள்ள முடியும்.

மொழி

ஜெருசலேம் : "ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் குழந்தைகளின் மூளை எளிதில் மூப்படையாது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில், மூளை செயல்பாடு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் வருமாறு: தங்களின் தாய் மொழி தவிர, இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகளை பேசும் குழந்தைகள், எதிர்காலத்தில் பல விதத்தில் பயன் அடைவர். பல மொழி பேசும், 75 வயது முதல் 95 வயதிற்கு உட்பட்ட முதியவர்கள் பலரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அதிக மொழி பேசுவோரின் அறிவாற்றல் சிறப் பாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முதியவர்கள் தெளிவான மன நிலையுடன் உள்ளனர். தாய் மொழி தவிர, இரண்டாவது, மூன்றாவது என பல மொழிகளைக் கற்றதே, அவர்களின் மூளை எளிதில் மூப்படையாததற்கு காரணம்.

அரிய ஓவிய கண்காட்சி

லண்டன் : கடந்த 17ம் நூற்றாண்டில், ராமாயணத்தை சித்தரித்து வரையப்பட்ட, அழகு மிளிரும் ஓவியங்கள், தற்போது, லண்டனில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேவாரைச் சேர்ந்த ராணா ஜகத் சிங் என்பவர், ராமாயண புராணக் கதையை சித்தரிக்கும், உயிரோட்டமுள்ள, அரிய வகை ஓவியங்களை வரைந்துள்ளார். இவை, 17ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை. இந்த ஓவியங்கள் அனைத்தும், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நூலக புரவலர் பிர்லா என்பவரின் உதவியுடன், லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. உலகின் அரிய வகை ஓவியங்கள் மற்றும் கலை ஆகியவை, பிரிட்டிஷ் நூலகத்தில் கண்காட்சிகளாக இடம் பெறுவது வழக்கம். இந்த பெருமை, மேவாரில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமாயண ஓவியங்களுக்கும் கிடைத்துள்ளது. "இந்தியாவின் பெருமை மிகு இதிகாசம் ராமாயணம்' என்ற தலைப்பில், உயிரோட்டமுள்ள, இந்த ஓவியங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் வகையில், ஸ்லோகங்களும், கண்காட்சியில் ஒலிபரப்பப்படுகிறது. வரும், செப்டம்பர் 14 வரை, இந்த கண்காட்சி நடக்கிறது.

அரிய தாவரம்

Posted by Picasa

௧0 பைசா தோசை

ஐதராபாத்: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 360 கி.மீ., தொலைவில் உள்ளது கடப்பா நகரம். இங்குள்ள ஒரு சிறு கடை முன், தினமும் காலை நேரங்களில் ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்றபடி, மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் வேக, வேகமாக தோசைகளை, "உள்ளே' தள்ளுகின்றனர். இந்த அளவுக்கு கூட்டம் வர காரணம், தோசையின் விலை வெறும் 10 பைசா தான்.



இந்த உணவு கடையை நடத்தி வருபவர் முனி ரெட்டி (60); இவரது மனைவி ராம லட்சுமி. இவர்கள் நாள் தோறும், 2,000 தோசைகளை விற்பனை செய் கின்றனர். தோசைக்கு தொட்டுக் கொள்ள, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என, மூன்று வகையான சட்னியும் அளிக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள், 100 தோசை முதல் 200 தோசை வரை பார்சலாகவும் வாங்கி செல்கின்றனர்.



தனது அனுபவம் குறித்து முனி ரெட்டி கூறியதாவது: இந்த தோசை கடை யை, 50 ஆண்டுகளுக்கு முன், துவக்கி வைத்தவர் எனது தாய் சுப்பம்மா. அப்போது அவர், ஆறு பைசாவுக்கு (ஒரு அணா) தோசை விற்பனை செய்தார். 1970ம் ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், தோசையின் விலை 10 பைசாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு மேல், விலையை உயர்த்த கூடாது என, எனது தாய் கட்டளையிட்டார். அந்த கட்டளையை 20 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறேன்.



ஏழை மக்கள் தான், இந்த தோசையை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தோசையை தயாரிக்க, ஒன்பது பைசா செலவாகிறது. சட்னி செலவு இதில் சேராது. எனினும், ஒரு பைசா லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறேன். விலைவாசி உயர்ந்து விட்டதால், தோசையின் அளவை குறைத்து விட்டேன். இருந்தாலும், காலை நேரங்களில், கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு நபர், ஆறு முதல் 10 தோசை வரை சாப்பிடுவார்.



இந்த சிறு வருமானம், எனது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. இருந்தாலும், கூடுதல் வருமானத்துக்காக, பிஸ்கட், சிகரெட், மிட்டாய்கள், சோப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறேன். ரேஷனில், குறைந்த விலையில் அரிசி கிடைக்கிறது. இருந்தாலும், அந்த அரிசியின் தரம் சிறப்பாக இல்லை. எனவே, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரிசியை வாங்குகிறேன். அவர்கள், 40 சதவீதம் விலையை குறைத்து, தருகின்றனர். இத்தொழிலில், எனது இரண்டு மகன்களுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், என் உயிர் உள்ள வரை, 10 பைசா தோசையை விற்பனை செய்வேன்.

அகழ் வாராச்சி

சென்னை : "நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆதிச்சநல்லூர் தொன்மை யை வெளிப்படுத்தவும், அந்த இடத் தை பாதுகாக்கவும், உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்' என்று தென்மாநில இயக்கத்தின் தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.



சென்னையில் நேற்று இருவரும் அளித்த பேட்டி: டாக்டர் சேதுராமன்: திருநெல்வேலிக்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில், மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்பொருள் துறையினால் நடத்தப்பட்ட அகழ் வாராச்சியில் கிடைத்துள்ள சான்றுகள் மூலம், தமிழ் நாகரிகம் உலக நாகரிகத்திற்கு இணையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 140 ஆண்டுகளுக்கு முன், அகழ் வாராய்ச்சி செய்த ஜெர்மனிய ஆய்வாளர் டாக்டர் ஜாகர், 1903ம் ஆண்டு அப்பகுதியில் ஆய்வு செய்த ஆங்கிலேயே ஆய்வாளர் அலெக்சாண்டர் ரீ ஆகியோர், "திருநெல்வேலி மாவட்டம் தான் தெற்கு ஆசிய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். அவர்கள் நான்காயிரத்துக்கும் அதிகமான தொல் பொருட்கள் கண்டுபிடித்துள் ளனர்.தமிழ் நாகரிகத்தின் தொன்மை நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பதும், ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள் ளதாக இப்போது தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆராய்ச்சியை அரசு நடத்த வேண்டும். அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். முதுமக்கள் தாழிகள், பானைகள் போன்ற தொன்மையான பொருட்கள் தினமும் அழிந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் ஆதாரங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து, உடனடியாக அந்த பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் மாதம் ஆதிச்சநல்லூரிலிருந்து தென்மாநில இயக்கத்தின் சார்பில் பேரணி நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும்.



தொல்லியல் ஆய்வாளர் டி.கே.வி.ராஜன்: மகாராஷ் டிரா, கர்நாடகா மாநிலங்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக இருந்தன என்று வரலாறு கூறுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல் துறை மேலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முதுமக்களின் தாழிகளும், பானை ஓடுகளும், வெண்கலம், மற்றும் மண்டபாண்ட வகைகளும் கிடைத்துள்ளன. அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகள் தமிழ் நாகரிகத்தை மூன்றாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் எடுத்துச் செல்கின்றன. தமிழர்கள் தான் பானை தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினர் என்ற புதிய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் அகழ் வாராய்ச்சி மேற்கொள்ள தனியார் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அதேபோல் மத்திய அரசும், தனியார் அமைப்புகளும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட அங்கீகாரம் அளிக்க வேண்டும். அப்போது தான் தொன்மையான பொருட்களை அழிவதை தடுக்க முடியும். திருநெல்வேலி மாவட் டத்தில் ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், பாளையங்கோட் டை உள்ளிட்ட 37 ஊர்களில் ஒவ்வொரு நாளும் முதுமக்கள் தாழிகள், பானைகள், கொள்கலன்கள் அழிக்கப் பட்டு வருகிறது. பானை தயாரிப்பில் தமிழகம் தான் முன்னோடி என்பதை கர்நாடகா, மகராஷ்டிரா மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதிச்சநல்லூரில் முழுமையான அகழ்வாராய்ச்சியை தமிழக அரசு நடத்தி அங்கு மறைந்து கிடக்கும் தமிழகத்தின் பெருமைகளை உலகறியச் செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும் தற்போதைய ஈராக் நாட்டின் மெசபடோமியா நாகரிகத்துக்கும் பல ஒற்றுமை உள்ளது. திருமணத்தின் போது பெண்கள் தங்களது தலையில் தங்கத் தகடு கட்டும் பழக்கம் உள்ளது. அதேபோல் மெசபடோமியா பெண்களும் தங்களது திருமணத்தின் போது தலையில் தங்கத் தகடு அணிகின்றனர். உலகத்திலேயே நான்கு ஆயிரம் தொல்பொருட்கள் கிடைத்த ஒரே இடம் ஆதிச்சநல்லூர் என்றால் மிகையல்ல.இவ்வாறு டி.கே.வி. ராஜன் கூறினார்.

கொசு ஒழிப்பு !

may 2, 2008

பெங்களூரு: கொசுக்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த புதுவகை நடைமுறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டி.ஆர்.டி.இ.,) கண்டுபிடித்துள்ளது. டி.ஆர்.டி.இ., அமைப்பின் வாழ்க்கை அறிவியல் மற்றும் மனித வள பிரிவின் தலைமை பொறுப்பாளர் செல்வமூர்த்தி கூறியதாவது: "லார்வா' என அழைக்கப்படும் முட்டைப்புழுக்கள், நீர் நிலைகளில் வெளிப்படுத்தும், பெரோமோனி ஹார்மோன் தான், பெண் கொசுக்கள் ஈர்த்து, முட்டைகளை இட வைக்கின்றன. பெரோமோனி ஹார்மோன் மற்றும் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளையும் ஒன்று சேர்த்து, "அட்ராக்சிசைட்' என்ற திரவத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த திரவத்தை, குறிப்பிட்ட நீர்நிலைகளில் தெளித்தால் போதுமானது. அந்த நீர்நிலைகளை தேடி வந்து கொசுக்கள் முட்டைகள் இடும். கொசுக்களின் இன பெருக்கம் குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். இந்த சோதனையை, அமைச்சரவை செயலர் பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையை நடத்திப்பார்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் கூறியுள்ளார். இந்த சோதனையை, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டில்லி மாநிலங்கள் ஏற்கனவே, நடத்த தொடங்கி விட்டன. சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அசாமில் தேஸ்பூர் என்ற இடத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சிக் கூடம், மூலிகை கொசு விரட்டியை கண்டுபிடித்துள்ளது. நோய்களை பரப்பும் கருவியாக, கொசுக்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஆராய்ச்சி நடக்கிறது. எனவே, மூலிகையை கொண்டு திரவ நிலையில் உள்ள கொசு விரட்டியும், கிரீமும் உருவாக்கப்படுகிறது. சாதாரண கொசு விரட்டி, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே பலன் தரும். ஆனால், மூலிகை கொசு விரட்டி, 12 மணி நேரம் பலன் தரும்; இது வடகிழக்கு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு செல்வமூர்த்தி கூறினார்.

காஸ் ஸ்டவ்

may 2,2008

பெங்களூரு: "ஐரோப்பிய மாடல் காஸ் ஸ்டவ் வாங்கலாமா?' என்று தான் நகரங்களில் உள்ள பெண்களின் சிந்தனை போகிறது. ஆனால், சுற்றுச்சழல் பாதுகாப்புக்கு உண்மையாக பாடுபடுபவர்கள் நாங்கள் தான் என்று கிராம பெண்கள் சாதித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேடாக உள்ளவையாக சில மாசுகளை, ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிட்டுள்ளது. அதில், நான்காவதாக உள்ளது "கார்பன்' வாயு தான். பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், இந்த வாயு மிக மோசமாக சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

இவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நகரங்களில் உள்ள மக்கள் அதில் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை. சூரிய சக்தி மின்சாரம் முதல் ஸ்டவ் வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல பொருட்கள் உள்ளன. இந்த வகையில், சமீபத்தில் சிறிய ஸ்டவ் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பெயர் "ஊர்ஜா' சிறிய ஸ்டவ் என்றாலும், காஸ் அடுப்பு போல எரியும். காஸ் சிலிண்டர் செலவை விட பாதி தான் செலவாகும். தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இந்த ஸ்டவ்வை பிரபலப்படுத்த கிராமங்களில் உள் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான "பிபி' சார்பில், இந்தியாவில் "பி.பி.,எனர்ஜி இண்டியா' என்ற நிறுவனம், இந்த ஸ்டவ்வை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அரசு உதவியோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போ இல்லை. கிராமங்களில் நேரடியாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரசாரம் செய்து, பெண்களை நியமித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள கிராமங்களில் 10 லட்சம் ஸ்டவ்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த நிறுவனம்.

இதற்காக, இந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மூன்றாயிரம் பெண் விற்பனை பிரதிநிதிகளை நியமித்துவருகிறது. ஸ்டவ்வின் விலை 675 ரூபாய். இந்த ஸ்டவ்வில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது, வேர்க்கடலை சருகுகள் உட்பட விவசாய மிச்சம் மீதிகளை காயவைத்து, தயாரிக்கப்படும் உருண்டைகள் தான். ஒரு மூட்டை எரிபொருள் உருண்டைகள் விலை 50 ரூபாய். கர்நாடக கிராமங்களில் இப்போது படுபிசியாக இந்த ஸ்டவ்வை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர். தமிழக கிராமங்களிலும் விரைவில் இந்த ஸ்டவ் விற்பனைக்கு வரும்.

ராஜா ராம் மோகன் ராய்

april 30, 2008

லண்டன் : பிரிட்டனில் அமைந்துள்ள, பிரபல சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராய் சமாதி, 165 ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவில், சமூக சீர்திருத்தத்துக்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன் ராய். பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பகுதியில், 1833 ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அங்கு சமாதி அமைக்கப்பட்டது. மேற்கு வங்கத்தை சேர்ந்த ராய் மீது, இந்தியர் பலருக்கும் தனி மரியாதை உண்டு. அதனால், பிரிட்டன் செல்லும் போது, ராயின் சமாதிக்கு சென்று வருவர். கடந்த, 20 ஆண்டாக சமாதியை கவனிப்பாரின்றி சிதைந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த, இந்தியர்கள் பலரும் பிரிட்டன் அரசுக்கு மனு அனுப்பினர். ஆனால், பிரிட்டன் அரசு கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஆதித்திய பொத்தார் என்பவர், 35 லட்சம் ரூபாய் நன்கொடை தந்துள்ளார். பிரிஸ்டல் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, ராயின் சமாதியை புதுப்பிக்க வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து, ராஜாராம் மோகன் ராய் சமாதியை புதுப்பிக்க 20 ஆண்டுக்கு பின் பணிகள் ஆரம்பமாக உள்ளன.சிங்கப்பூர் தொழிலதிபர், கோல்கட்டாவை சேர்ந்தவர். ராயின் மீதுள்ள மதிப்பால் அவர் நன்கொடை தந்துள்ளார்.பிரிஸ்டலில் உள்ள ராய் சமாதியில், அரியாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது உருமாறி உள்ளது. மேற்கு வங்க பாரம்பரிய முறைப்படி இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இதையும் புதுப்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்கம்

அலகாபாத்: உ.பி., மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொடுத்தனர். உ.பி., மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் குலாம் முகமது. இவரது மனைவி ரஷிதா பேகம். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்களுக்கு, பெண் குழந்தை இல்லை. இதனால், 14 ஆண்டுகளுக்கு முன், சரீந்தர் யாதவ் என்ற இந்து மதத்தை சேர்ந்தவரின் பெண் குழந்தையை, தத்தெடுத்து வளர்த்தனர். அந்த குழந்தைக்கு பபிதா என பெயரிட்டு, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். காலச் சக்கரம் வேகமாக உருண்டோடியது. பபிதாவிற்கு திருமண வயது வந்தது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது, அவர்களுக்கு புதுக் குழப்பம் ஏற்பட்டது.

பபிதாவிற்கு, முஸ்லிம் மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, என்பதே அந்த குழப்பம். இறுதியில், இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பது என முடிவு செய்தனர். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமடைந்தது. ஆனால், குலாம் முகமது நினைத்தது போல், அது, அத்தனை எளிதான காரியமாக இல்லை. முஸ்லிம் வீட்டில் வளர்ந்த பபிதாவை, திருமணம் செய்ய, இந்து மதத்தினர் தயக்கம் காட்டினர்.
இறுதியில், பராவுலி கிராமத்தை சேர்ந்த கங்கா பிரசாத் யாதவ் என்பவர், தனது மகன் பப்லுவுக்கு, பபிதாவை திருமணம் செய்ய முன்வந்தார். திருமண வேலைகள் வேகமாக நடந்தன. முழுக்க முழுக்க, இந்து மத சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகையின் அட்டையில், விநாயகர் படத்தை அச்சிட்டு, தனது உறவினர்களுக்கு வினியோகம் செய்தார், குலாம் முகமது.
இந்துமத சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது. முஸ்லிம்-இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வந்திருந்ததால், திருமணப் பந்தல் நிரம்பி வழிந்தது. திருமணம் முடிந்து, பபிதாவை மாப்பிள்ளை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் போது, குலாம் முகமது-ரஷிதா பேகம் தம்பதியினர், பிரிவுத் துயர் தாங்காது, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி குலாம் முகமது கூறுகையில்,"இது, எனது மகளின் திருமணம். ஒரு தந்தை, தனது மகளுக்கு, செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ளேன். இதை, புதுமையாக நான் கருதவில்லை' என்றார். சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த திருமணத்திற்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
நன்றி தினமலர்.காம்

மூங்கில்

Posted by Picasa

நன்றி தினமலர்

தொழிலாளியின் சமூக சேவை!

Posted by Picasa


நன்றி தினமலர்

இப்படி ஒரு துணை முதல்வர்!

Posted by Picasa


நன்றி தினமலர்

வறுமையில் செம்மை!

Posted by Picasa

நன்றி தினமலர்

துளசி

Posted by Picasa


நன்றி: தினமலர்.காம்

வீட்டை உடனே காலி செய்த மாஜி அமைச்சர்

அமைச்சர் நாராயணசாமிக்கு கிடைத்துள்ள மத்திய திட்டத்துறையை, இதற்கு முன், ராஜசேகரன் என்பவர் கவனித்து வந்தார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் முடிந்து விட்டது. மீண்டும் எம்.பி.,பதவி வழங்கப்படவில்லை. மறைந்த காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் மருமகனான இவர், தனக்கு எம்.பி., பதவி வழங்கப்படவில்லை என்றதும் மறுநாளே டில்லியில் உள்ள வீட்டை காலி செய்து பொருட்களை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், தனது வீட்டுச் சாவியை இன்று அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்க இருக்கிறார். பதவி இழந்த உடனேயே அமைச்சர் ஒருவர் வீடு காலி செய்வது அதிசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமலர்.காம்

இப்படியும் மனிதர்கள்!

 
Posted by Picasa


நன்றி தினமலர்.காம்

இளைஞருக்கு அதிர்ஷ்டம் -2

Posted by Picasa

இளைஞருக்கு அதிர்ஷ்டம் -1

Posted by Picasa

மாணவர் சாதனை -1

Posted by Picasa

மாணவர் சாதனை -2

Posted by Picasa


நன்றி தினமலர்

சுத்தமான கிராமம்

 
Posted by Picasa


நன்றி தினமலர்

யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

 
Posted by Picasa


தினமலர் 23/3/2008

ரோஜா

Posted by Picasa


தினமலர் 23/3/2008

இந்த கார் சந்தைக்கு வந்தா.....!

From mypic

நன்றி தினமலர்.காம்

மருத்துவத்தில் சம்ஸ்கிருதம்-1

From mypic


நன்றி: தினமலர்.காம்

மருத்துவத்தில் சம்ஸ்கிருதம்-2

From mypic


நன்றி: தினமலர்.காம்

சொந்தமாக ஒரு மின்நிலயம்!

From mypic

நன்றி: தினமலர்.காம்

தீவன உண்டியல்

From mypic

நன்றி தினமலர்.காம்

மனோஜ் திவாரி2


நன்றி தினமலர்.காம்.

மனோஜ் திவாரி-1


நன்றி தினமலர்.காம்

உலகில் உயரமான ரயில் பாலம்

From mypic

நன்றி தினமலர்.காம்

தேன்

From mypic


நன்றி தினமலர்

ஹைபர் ஆக்டிவ் குட்டீஸ்-2

 
Posted by Picasa

ஹைபர் ஆக்டிவ் குட்டீஸ்-1

 
Posted by Picasa

நன்றி தினமலர்.காம்

நேற்று ஆயுள் கைதி, இன்று பள்ளி ஆசிரியர்

 
Posted by Picasa


நன்றி தினமலர்.காம்

உமியில் இருந்து ஏரோஜெல்

 
Posted by Picasa


கொஞ்சம் புரியல இல்லை? விக்கிபீடியா பாருங்க.http://en.wikipedia.org/wiki/Aerogel

மத நல்லிணக்கம்

Posted by Picasa


நன்றி தினமலர்.காம்

அறுபது ஆண்டுகளுக்குப்பின் விளைந்த அரியவகை மூங்கில் நெல்

Posted by Picasa


நன்றி தினமலர்.காம்

புதிய காஸ் சிலிண்டர்

Posted by Picasa

நன்றி தினமலர்.காம்