நல்ல சேதி-3 31 ஜனவரி

தினமலர் 31 ஜனவரி கடலூர் இணைப்பு பக்கம்1
செங்கால் ஓடை பிரச்சினையில் விவசாயிகளுக்கு விடிவுக்காலம்!

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு நீர் வரும் செங்கால் ஓடை 30 இலட்சம் செலவில் தூர் வாரப்பட்டு வருகிறது. இது பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. 2005 இல் கொஞ்சம் தூர் வாரப்பட்டு ஆக்கிரமிப்பு பிரச்சினைகளால் நின்று போனது.
மழைக்காலங்களில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை கள்ளாத்தூர், செந்துறை உட்பட பல பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த ஓடை வழியே தான் ஏரிக்கு வரும். தூர் வாரப்படாமல் இந்த நீர் சித்தமல்லி அகரபுத்தூர், பா.புத்தூர், கருணாகர நல்லூர் ஆகிய கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்தது.
இப்போது ராஷ்ட்ரீய சம்விகாஸ் யோஜனா திட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி துவங்கி

நடைபெற்று வருகிறது.
சுமார் 20,000 ஏக்கர் நிலம் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்படும் என்று தெரிகிறது.

நல்லசேதி 30-01-2008

பத்தாயிரம் கிராமங்கள் இஸ்ரோவினால் விண்வெளி நுட்பத்துக்கு போகின்றன:

டெக்கான் க்ரானிகிள் ஜனவரி 30, 2008

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 4000 கிராம ப்ளாக்குகளில் கிராம வள மையங்கள் (விஆர்சி) அமைப்பதில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த 5 ஆண்டு திட்டத்துக்குள் 10, 000 அமைக்கப்பட்டுவிடும். மற்றபடி அணுக இயலாத கிராமங்கள் இதனால் தொடர்ப்புக்கு வந்து விடும். செய்திகள், வேளான் சேவைகள், தொலைதூர மருத்துவம், படிப்பறிவு நடவடிக்கைகள் ஆகியன இதனால் சாத்தியப்படும்.
இப்போது ஏறத்தாழ 30,000 மெய்நிகர் வகுப்பறைகள் உள்ளன. 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றன. இதை 3 கோடி கிராம குழந்தைகளுக்கும் கிடைக்கும்படி செய்வதே இத்திட்டத்தின் ஒரு நோக்கம். தமிழ்நாட்டில் திருவையாறு, செம்பட்டி, தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் வானிலை, நீர்வள மேலாண்மை, இயற்கை விவசாயம், மீன்பிடிக்க தகுந்த இடங்கள் அறிதல் ஆகிய சேவைகளை அளித்து வருகின்றன.
இவை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் மற்றும் விஆர்சி திட்ட அமைப்பாளர் டாக்டர் ஹெக்டே அவர்களால் டெக்கான் க்ரானிகிள்- இக்கு பேட்டி ஒன்றில் சொல்லப்பட்டது.

நல்ல சேதி 31-01-2008

தினமலர்- புதுவை 31

டிசிஎம் ஸ்ரீராம் கன்சாலிடேடட் நிறுவனம் ஏற்படுத்திய கிராம பசுமைப்புரட்சி ஹார்வேர்ட் பல்கலையின் பாடமாக மாறியுள்ளது.



இந்த நிறுவனம் 1930 களில் விவசாயத்தில் பெரும் ஆர்வம் காட்டியது. குறிப்பாக கரும்பு. 1966 இல் உர உற்பத்தி. 1997 இல் ஸ்ரீராம் க்ருஷி விகாஸ் கைட்ஸ் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இதன் படி சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. விவசாயத்துறை நிபுணர்கள் அந்த பகுதிக்கு அமைக்கப்பட்டனர். இவர்கள் எல்லா விவசாய பிரச்சினைகளிலும் உதவினர்.

இதைத்தொடர்ந்து மகசூல் அதிகரித்தது. விளை பொருட்களும் நியாயமான விலையில் கிடைத்தன. விவசாயிகளின் இலாபமும் அதிகரித்தது.

கடந்த ஆண்டு உலக வங்கி கூட்டத்தில் இத்திட்டத்தைப்பற்றி அறிந்த ஹார்வேர்ட் பல்கலை பேராசிரியர் ஒரு குழுவுடன் நேராக இந்தியா வந்து ஆராய்ந்து பின் இதை ஒரு பாடமாக ஆக்கியுள்ளார்.

நல்ல சேதி 31 ஜனவரி 2008

விவசாயிகளுக்கு உதவ ஹை டெக் பரிசோதனை நிலையம் சென்னையில் துவக்கப் பட்டுள்ளது. காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைய உள்ளனர். புத்தம்புது தொழில் நுட்பத்துடன் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் (என்ஏஎஃப்) துவங்கியுள்ள பரிசோதனை நிலையம் திசு வளர்ப்பு நாற்றுகளை வழங்க உள்ளது. இது வருடம் 20 லட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்யும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

டெக்கான் க்ரானிகிள்

நல்ல சேதி2, 29-01-2008

ஆந்திர நடிகர் டாக்டர் ராஜசேகர் சமீபத்தில் நிருபர்களிடம் பேசும்போது ஒரு கருத்து தெரிவித்தார். சமீபத்தில் அரசியலில் குதித்த நடிகர் சிரஞ்சீவிக்கு "அனுபவம் போதாது" என்றும் "அவர் கட்சி துவக்கினாலும் நான் அதில் சேர மாட்டேன்" என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த "சிரஞ்சீவியின் ரசிகர்கள்" சிலர், ராஜசேகர் தன் குடும்பத்துடன் ரயில் நிலையத்திலிருந்து காரில் வீட்டுக்கு திரும்பும் போது உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த ராஜசேகர் குடும்பத்தினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகித்சை பெற்றனர்.

நல்ல சேதி இங்குதான் வருகிறது.

இதை கேள்விப்பட்டு சிரஞ்சீவி ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வரும்போது நிருபர்களிடையே பேசும்போது "துரதிஷ்டவசமான இந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. எவருக்கும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முழு உரிமை ஜனநாயகத்தில் உண்டு. இந்த செயலில் யார் ஈடு பட்டிருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.
இது ஒரு செட் அப் இல்லை என்றே நம்புவோம்!

தினமலர் புதுவை 29-01-2008 பக்கம் 9

நல்ல சேதி1 29-01-2008

பிரிட்டனில் கேரள உணவு வகைகள் பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன. பக்கிம்காம் அரண்மனைக்கு அருகில் உள்ள கொல்லம் என்ற உணவகத்துக்கு சர்வ தேச விருது கிடைத்துள்ளது. டாவோசில் நடந்த சர்வ தேச பொருளாதார கூட்டமைப்பில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவு விடுதியின் உணவு பரிமாறப்பட்டது. இதன் தலைமை அதிகாரி அயலூர் ஷ்ரிராம் நேரடியாக இதை மேற்பார்வையிட்டார். அப்போதுதான் அந்த செய்தி வந்தது. சர்வ தேச அளவில் பெரிதும் கௌரமாகக்கருதப்படும் "தி மிச்செலின் கைடு டொ தெ கிரேட் பிரிட்டன் அண்டு அயர்லாந்து - 2008” என்ற விருது கொல்லம் விடுதிக்கு கிடைத்துள்ளது. தாஜ் குழுமம் இதை நடத்தி வந்தாலும் ஷ்ரிராம்தான் முழுக்க முழுக்க கவனித்துக்கொள்கிறார். இஙிலாந்து செல்லும் பாலிவுட் நக்ஷத்திரங்கள் விரும்பி சாப்பிடும் இடம் இதுவாகும். ஏற்கெனவே இந்த விருது பெல்கிரேயாவில் உள்ள, மைபேரில் உள்ள தமரிந்த், வினீத் பாட்டியா ரசோய் ஆகிய உணவு விடுதிகளுக்கும் கிடைத்துள்ளது.

-தினமலர் புதுவை 29-01-2008 பக்கம் 16