எம் ஏ படிப்பில் ௭ பதக்கங்கள் ஆதி திராவிட மாணவர் சாதனை

Posted by Picasa


தினமலர் புதுவை 22-2-2008 பக்கம் 9

இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு....

இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு ஒரு முழு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இது பற்றி கூறும்போது ஜனவரி 3-7 இல் விசாகையில் இ.ச.க வின் 95 ஆம் அமர்வில் பிரதமர் தெரிவித்த கவலைகளை இது கவனத்தில் கொண்டுள்ளது என்றார். இதன்படி ஒரு தேசிய விவசாயிகள் பங்கு கொள்ளும் ஆராய்சி இணையம் உருவாக்கப்படும். எப்போதும் பசுமையாக இருக்க திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயிகள், கொள்கை உருவாக்குவோர், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எல்லா வேளான் கல்லூரிகளும் இதில் பங்கு வகிப்பர். இது மட்டும் இன்றி இஸ்ரோ ஐகார் ஐஐடிகள், போன்ற நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு.
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் "மேலும் வருமானம் தேடி ஆண்கள் நகர்புறங்களுக்கு செல்வதால் விவசாயம் பெண்கள் சார்ந்ததாக ஆகி வருகிறது. ஆகவே உணவு பாதுகாப்பு என்பது பெண்களின் பலத்தை அதிகரிப்பதில் உள்ளது. திட்டத்தில் பெண் விவசாயிகளுக்காக 9 அம்ச துணை திட்டம் உண்டு என்றார்.
http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp

தொழிலில் புதுமை புகுத்தும் பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பத்மஸ்ரீ

அமெரிக்காவில் புதுமைகள் மூலம் சாதனை படைக்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த பத்மஸ்ரீ வாரியரும் இடம் பெற்று உள்ளார்.
மலையாளியாக பிறந்து ஆந்திராவில் வளர்ந்தவர். தில்லி ஐஐடி யில் ரசாயன இஞ்சினீரிங்கும் கார்னெல் பல்கலையில் எம் எஸ் உம் பெற்றார். கடந்த ஆண்டு வரை மோட்டொரோலோ வில் தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக பணி புரிந்தார். இப்போது சிஸ்கோ. இவரது புதுமையான அணுகு முறைகள் மூலம் நிறுவனங்களின் லாபம் அதிகமாயிற்று. புதுமை மட்டும் அல்லாது அதிக சம்பளம் பெறும் பட்டியலிலும் இவர் இருக்கிறார். பிரபல அமெரிக்க பிங்க் பத்திரிகை வெளியிட்ட புதுமையான அணுகு முறையால் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் 15 பேரில்
இவர் உள்ளார்.

தினமலர் 19-02-2008 புதுவை பக்கம்14

பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு

விசில் அடித்து மாணவர்களை திரட்டும் தலைமை ஆசிரியர்.
மே.வங்கம் மிட்னாபூர் அருகே காடல் அருகே சாதிசாக் கிராமம். ஆரம்பப்பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் பிரணாய் கிருஷ்ணா பட்டாச்சாரியா. 7 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு ஏற்றவர். தொடர்ந்து மாணவர் வருகையை சோதித்ததில் சாவகாசமாக மதியம் வருகிறார்கள் என தெரிந்தது. காரணம் விசாரித்ததில் அனைத்து மக்களும் படிப்பறிவு இல்லாதவர்கள், மணி பார்க்கக்கூட தெரியாது, கடிகாரமும் கிடையாது என கண்டு பிடித்தார். இதை சரி செய்ய தினமும் காலை 9-30 க்கு சைக்கிளில் கிராம தெருக்களில் விசில் ஊதியபடி வலம் வருவார். மக்கள் நேரம் ஆகி விட்டது என உணர்ந்து மாணவர்களை தயார் செய்து அனுப்புவர். இப்படி மெனக்கெடுவது பள்ளியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களை நெகிழச்செய்துள்ளது. தாங்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த வேலையை தாமே செய்ய உறுதி கொண்டு உள்ளனர்.
குழந்தைகள் தினமும் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு தயார் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வானொலியில் தினசரி காலை "பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு" என்ற பாடலை ஒலிபரப்புகின்றனர்.
புதுவை தினமலர் 19-02-2008 பக்கம் 12

இயற்கை உரங்களால் நெல் விளைச்சல் அதிகரிப்பு

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அதிக நெல் பயிரிடும் பகுதி. இங்குள்ள வடக்கன்சேரி பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் 20 பேர் வடக்கன்சேரிபாத சேகர சமிதி என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். பல ஆண்டுகளாக நெல் பயிரிட்டுவரும் இவர்கள் இந்த முறை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை கைவிட்டு இயற்கை உர சாகுபடிக்கு மாறினர். இப்போது அருவடை நடக்கிறது. ஏக்கருக்கு 4 டன் விளைந்துள்ளது. (வழக்கமாக 3.5 டன்) இதை கேரளாவை சேர்ந்த போப்ஸ் நிறுவனம் அதிக விலையாக குவிண்டாலுக்கு ரூ.1125 கொடுத்து வாங்குகிறது. (இரண்டு வருடம் முன் 420, போன வருடம் அரசு நிர்ணயித்த ஆதரவு விலை 900.)
விவரமான தகவல் : தினமலர் புதுவை பதிப்பு 20-02-2008 பக்கம் 2

தமிழில் எழுத

டும் டும் டும்!
போன ௧௨ தேதி முதல் தமிழில் நேரடியாக எழுத ப்ளாகர் வசதி செய்துள்ளது.
Settings |பேசிக்ஸ் பக்கத்தில் சென்று இந்த வசதியை இயலுமைப்படுத்துங்கள்!
மேலும் படிக்க
http://help.blogger.com/bin/answer.py?answer=58226

12 தேதி என்பது தமிழ் எண்களாக வந்துள்ளதை காண்க!