பண்ணை விவசாயத்தில் புதிய உபகரணங்கள்

 
Posted by Picasa

மயக்க பிஸ்கட் கொள்ளையர் பிடிபட்டனர்

சென்னை : ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சமோசா கடையில் வேலை பார்த்துக் கொண்டே இக்கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து அவர்களிடம் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்வது கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த மயக்க பிஸ்கட் கும்பலிடம் சிக்காமல், பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரயில்வே போலீசாரும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். ரயிலில் முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களான பிஸ்கட், குளிர் பானங்களை சாப்பிடக் கூடாது என்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். ரயில் நிலையங்களில் உள்ள `டிவி'க்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்களை செய்தனர். இருப்பினும், மயக்க பிஸ்கட் கும்பலிடம் பயணிகள் சிக்கிக் கொள்வது தொடர்ந்தது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி கண்பத். இவர் கடந்த 23ம் தேதி ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மயக்க பிஸ்கட் கும்பலிடம் சிக்கி நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தார். இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.வியாபாரி கண்பத், மூன்று தினங்களுக்கு முன் சென்னை பூக்கடை போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தன்னிடம் சகஜமாக பழகி, இந்தி மொழியில் பேசி, பிஸ்கட் கொடுத்த நபரை கண்டார். உடன் உஷாராகி ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். சென்ட்ரல் ரயில்வே போலீசார் `மப்டி'யில் கண்காணித்து கண்பத் சொன்ன அடையாளங்களை வைத்து கணேஷ்(40) என்பவரை சவுகார்பேட்டையில் கைது செய்தனர்.

விசாரணையில் கணேசுக்கு தினேஷ், ராம் அகர்வால் என்ற வெவ்வேறு பெயர் இருப்பதாகவும், இடத்திற்கு தகுந்தாற்போல் பெயரை மாற்றிக் கொள்வதும் தெரிய வந்தது. மயக்க பிஸ்கட் கொடுத்து, ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்க, கணேசுக்கு உதவியாக இருந்த அவரது கூட்டாளிகள் ஷியாம்லால்(40), சுனு(20). கிருஷ்ணு(24) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், வாடகை வீட்டில் தங்கியிருந்து, சமோசா தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். ரயிலில் கொள்ளையடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் சமோசா கடையில் வேலை செய்து வந்தனர். இந்த நான்கு பேரும் உத்திரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேரும் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்த ஏழு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகை, இரண்டு மொபைல் போன் மற்றும் ஒரு வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை ரயில்வே ஐ.ஜி., மாகாளி தெரிவித்தார். பேட்டியின் போது ரயில்வே டி.ஐ.ஜி., சிவனாண்டி, எஸ்.பி., சாரங்கன் உடனிருந்தனர்.
தினமலர்.காம்

அமெரிக்காவில் கால் பதிக்கும் இந்திய நிறுவனம்

அமெரிக்க வாகன உற்பத்தித் துறையில் கால் பதிக்கும் முதல் இந்திய நிறுவனம் இது. ஒவ்வொரு ஆண்டும் புது ரக வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது மகிந்திரா நிறுவனம். சமீபத்தில் அறிமுகமாகன ஸ்கார்பியோ, பெலிரோ ஜீப் கார்கள் விற்பனை, கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கார்கள், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்னையில் தயாரிக்கும் ரெனால்ட் லோகன் ரக கார்கள், இந்தியாவில் மட்டுமே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. புதிதாக அறிமுகமாகும் இங்கினியோ விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.எரிபொருள் விலை அதிகரித்ததை தொடர்ந்து, வாகன விற்பனை அமெரிக்காவில், 1.66 கோடி வாகனங்களில் இருந்து, கடந்த ஆண்டு 1.61 கோடி வாகனங்களாக குறைந்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவில், அமெரிக்கா தான் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.இதனால், அமெரிக்காவின் வாகன விற்பனையில் போட்டியிட முடியும் என்று மகிந்திரா நிறுவனம் நம்புகிறது. பாகங்களை ஒன்று சேர்த்து முழுமைப்படுத்தும் தொழிற்சாலைகளை, அமெரிக்காவில் துவக்க முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்கள் அல்லது சிகாகோவில் இந்த தொழிற்சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து இது துவக்கப்படும். இது தொடர்பாக, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடந்து வருகிறது. தொழிற்சாலைக்கான நிலம் குறித்தும் பேச்சு நடக்கிறது.இந்த தொழிற்சாலையில், ஸ்கார்பியோ, இக்னியோ, ஸ்போர்ட்ஸ் ரக கார்கள், பயணிகள் மற்றும் சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன
-----------
http://dinamalar.com/

செலவில்லா விவசாயம் 4

 
Posted by Picasa


நன்றி: தினமலர்.காம்

செலவில்லா விவசாயம் 3

 
Posted by Picasa


நன்றி: தினமலர்.காம்

கடல் பாசி- தலைவாசல் பகுதி விவசாயிகள்

விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியை(ஸ்பைரூலினா), தலைவாசல் பகுதி விவசாயிகள் பண்ணை அமைத்து வளர்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவ கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மழையின்மை, வெள்ளம் போன்றவை மாறி மாறி வருகிறது. மழையின்மையால் ஏற்படும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, பட்டுப்பண்ணை, மூலிகை பயிர் சாகுபடி என பல்வேறு தொழில் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி (ஸ்பைரூலினா) வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

கடல் வாழ் உயிரினமான பாசிகளில் 27 வகை உள்ளது. அவற்றில் 14 வகை கடல்பாசிகள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் `ஸ்பைரூலினா' என அழைக்கப்படும் கடல்பாசி மருத்துவ பயன்பாட்டிற்கும், துணை உணவாகவும் அதிகளவில் பயன்படுகிறது. கடல் பாசிகள் சில ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுத்து மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அதன் தேவை அதிகரிப்பு காரணமாக ஆய்வகத்தில் செயற்கையான முறையில் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் மாவட்டம் தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் மட்டும் முதற்கட்டமாக கடல்பாசி வளர்ப்பு தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தலைவாசல் அருகே உள்ள வேநாயகபுரம் கிராமத்தில் ராஜேஸ் என்ற விவசாயி கடல்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதில், தாய் வகை கடல் பாசி விடப்படுகிறது. நாள்தோறும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நீர் தொட்டியில் கடலில் தோன்றுவது போல் செயற்கையான முறையில் அலை எழுப்பி, பாசி கூடுதலாக வளர பணிகள் செய்யப்படுகிறது. திறந்தவெளியில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் அவை நன்றாக வளர்கிறது. கடல் பாசி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கப்படுகிறது. நாள்தோறும் வருவாய் என்பதால் விவசாயிகள் கடல் பாசி வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளனர்.

விவசாயி ராஜேஸ் கூறுகையில், "கடல் வாழ் தாவரமான கடல் பாசி வளர்ப்புக்கு தொட்டி அமைக்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் `மதர் கல்சர்' எனும் தாய் விதை 2 கிலோ விடப்படுகிறது. அதற்கு உணவாகவும், வேறு உயிரினம் வளர்வதை தவிர்க்கவும் சோடியம் பை கார்பனேட், யூரியா, மங்கனீசியம், பொட்டாசியம், பெரஸ் சல்பேட், சோடியம் குளோரைடு, பாஸ்பாரிக் அமிலம் போன்றவை ஒரு குறிப்பிட்ட அளவில் தொட்டியில் கரைக்கப்படுகிறது. 200 சதுர அடி தொட்டியில் நான்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 4 கிலோ கொண்ட தாய் பாசி விடப்படும். தாய் பாசி விடப்பட்டு 15 நாளில் அவை அறுவடை செய்யப்படும். நாள்தோறும் 500 கிராம் வரை கடல் பாசி எடுக்கப்படும். அவை மாத்திரையாகவும், துணை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது," என்றார்.

மூலிகை சாகுபடி இயக்கத் தலைவரும், கடல்பாசி வளர்ப்பு பயிற்சியாளருமான திருப்பத்தூர் ராஜாமணி கூறுகையில், `கடல் பாசி என்பது இயற்கையின் வரப்பிரசாதம். 500 மில்லி கிராம் கடல் பாசி ஒரு கிலோ காய்கறிக்கு சமம். கடல் பாசியினை மாத்திரையாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கிராம் கொண்ட இரண்டு மாத்திரையும், சிறியவர்கள் அரை கிராம் கொண்ட ஒரு மாத்திரையும் சாப்பிடலாம். புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்," என்றார். இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமலர் 26-02-2008

செலவில்லாத விவசாயம் 2

Posted by Picasa


http://dinamalar.com/2008FEB25/general_tn13.asp
படத்து மேலே சொடுக்கி படியுங்க!

சமஸ்கிருதம் படித்து பின் பெரிய சம்பளத்தில் வேலை

 
Posted by Picasa


தினமலர் 24-02-2008 http://dinamalar.com/

செலவில்லாத விவசாயத்திற்கு அழைப்பு:

கோவையில் மீண்டும் ஒரு பசுமை புரட்சி கருத்தரங்கில் பங்கேற்கிறார் சுபாஷ் பாலேக்கர்

பிப்ரவரி 24,2008,02:30
கோவை: 'வினை விதைப்பவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்...' என்ற பழமொழியும் இப்போது பொய்த்துப் போனது. எதை விதைத்தாலும் வேதனையை அறுவடை செய்வதே விவசாயிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசே சொல்லும் புள்ளி விபரம். இத்தனைக்கும் கடந்த ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு உர மானியமாக ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.38 ஆயிரம் கோடி.

ஈரியோபைடு, வாடல் நோய் என பயிர்களைத் தாக்கும் நோய்களின் படையெடுப்பு குறையவில்லை. தண்ணீருக்காக பக்கத்துத் தோட்ட விவசாயியுடன் துவ ங்கிய சண்டை, இப்போது பக்கத்து மாநிலம் வரைக்கும் பஞ்சாயத்தில் நிற்கிறது. வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே இருக்கின்றன; புதிது புதிதாக பயிர் ரகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் வாடிய பயிராக மண்ணில் சாய்ந்து கொண்டே போகிறது.

காடுகளெல்லாம் அழிக்கப்பட்டு, 'கான்கிரீட் காடு'களாக உருமாற, பயிர்கள் விளைந்த இடங்களில் பளபளக்கும் அடுக்கு மாடிகள் முளைக்கின்றன. விவசாயம்தான் செய்வேன் என்று வீம்பு பிடிக்கும் விவசாயிக்கு, கடனும், கவலையும் கழுத்தை நெரிக்கின்றன. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டையில் சின்னக் கருப்பு விழுந்தாலே துவண்டு போகும் விவசாயிக்கு, கடன் தொல்லையால் கவுரவம் கவிழும் போது உயிரை மாய்த்துக் கொள்வது உசிதமாகத் தெரிகிறது. விளைவு, விவசாயிகளின் தற்கொலை ஆண்டுக்காண்டு அதிகரிப்பு.

பத்தாயிரம் ரூபாய் விளைச்சல் பார்க்க, ஏழாயிரம் ரூபாய் செலவழிக்கும் விநோதத்தை அரங்கேற்றும் முட்டுவளிச் செலவுகள். களை எடுக்க ஆள் கிடைக்காத அவலம், தண்ணீர் பாய வேண்டிய நாளில் காய்ந்து கிடக்கும் கால்வாய், கடனுக்கு உரம் வாங்க, கடைக்காரனிடம் வரம் கேட்கும் வருத்தத்துக்குரிய வாழ்க்கை... இப்படி விவசாயம் என்பதே வேதனைகளின் கலவையாக மாறிப்போனதன் காரணம் என்ன...?.

தந்தையும், தாத்தாவும் இதே மண்ணில்தானே ஆயிரமாயிரமாய் விளைச்சல் பார்த்தார்கள்; ஆனந்தமாய் வாழ்க்கை நடத்தினார்கள் என்று அனுபவ பரிசோதனையும், ஆன்ம விசாரணையும் செய்து பார்த்தால், எந்த விவசாயிக்கும் ஒரு உண்மை தெரியவரும். தவறு மண்ணின் மீதில்லை, மனசுக்குள் இருக் கிறது என்று. மண்ணையெல்லாம் ரசாயன உப்புக்களின் உப்பளங்களாக மாற்றி விட்ட தவறுகளை யார் செய்தது? உள்ளே இருந்த கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை கண்ட உரத்தையும் போட்டு மண்ணோடு மண்ணாக சமாதியாக்கிய சாதனையை யார் நிகழ்த்தியது?மேய்ப்பதற்கு ஆளில்லை என்று பராமரிக்க முடியாமல் நாட்டுப்பசுவை வந்த விலைக்கு ஓட்டி விட்டது நினைவுக்கு வருகிறதா? இயற்கைக்கு எதிரான எல்லா விஷயங்களையும் செய்து விட்டு, இப்போது செயற்கையாக அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது...?.

இந்த வேதனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?...கீதைப்படி சொல்வது என்றால், நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை எல்லாம் நன்மையாகட்டும். நடப்பது நன்மையாக ஒரு வழி இருக்கிறது...முட்டுவளிச் செலவுகள் இல்லாத, கவலைகளைத் துரத்தியடிக்கும் புதிய வேளாண் மந்திரமான 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்தான் அது. நவீன இயந்திரங்கள், விளை நிலங்களை கீறிப்போடும் கனரக வாகனங்கள், விளம்பரங்களோடு பவனி வரும் வீரிய ரகங்கள், மூடை மூடையாக ரசாயன உரங்கள், கூட்டம் கூட்டமாய் வேலையாட்கள் என விவசாயிகளை பல முனைகளில் தாக்கி 'கொல்லும்' விவசாயத்துக்கு முடிவு கட்டி, 'வெல்லும் விவசாயம்'தான் இந்த 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்.

தண்ணீரைப் பாய்ச்சி, கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள், ஆனந்தத்தை அறுவடை செய்வதற் கான செலவில்லா விவசாயம்தான் இந்த புதிய முறை விவசாயம். உண்மையில் சொல்லப்போனால், மூதாதையர் நம் மண்ணோடு சேர்த்து நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் இது. அதை உங்களுக்கே நினைவூட்டி, இழந்து போன சந்தோஷங்களை மீட்டுக் கொடுக்கும் அதிசயம்தான் இந்த செலவில்லா விவசாய முறை. இந்த அதிசயத்தை கோவை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் அற்புத நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் மார்ச் 22லிருந்து 25 வரை நான்கு நாட்கள் நடக்க இருக்கிறது.

நொய்யலுக்கு மறு உயிர் கொடுத்து, ஏராளமான குளங்களில் ஈரத்தை நிறுத்தி வைத்த கோவை 'சிறுதுளி' அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இவர்களுடன் தினமலர் நாளிதழும் கரம் கோர்க்கிறது. எதற்காக? நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கத்தான். விரக்தியின் விளிம்பில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இந்திய விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, இன்னொரு பசுமைப் புரட்சிக்கு விதை போட்ட கனவு நாயகனான, 'உழவர்களின் கலாம்' சுபாஷ் பாலேக்கர் பங்கேற்கும் அரிய நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறது 'சிறுதுளி' அமைப்பு.

எல்லாம் சரி! யார் இந்த சுபாஷ் பாலேக்கர்?...அவரது அறிமுகம் நாளை! விவசாயிகளே இனியும் உங்கள் உழைப்பு வீணாக வேண்டாம். நம்மிடம் இருக்கும் இயற்கை வரங்களை கொண்டே முட்டுவளி செலவு எதுவும் இல்லாமல், தரமான விவசாயத்தை பார்க்க முடியும். இதற்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சிக்கு இப்போதே தயாராகுங்கள்....

http://www.dinamalarbiz.com/News_large.asp?News_id=156&new=2&pg=1