இன்றைய நல்ல சேதி 7 ஜனவரி 2008

சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்.
என ஆரம்பிக்கும் செய்தி (தினமலர்-பாண்டிச்சேரி பதிப்பு- ஜனவரி 7, பக்கம் 12) மகாராஷ்ட்ர மாநில அகோலா மாவட்ட பாரஸ் கிராமத்தை சேர்ந்த ருஜுல், 13 வயது, இப்போது அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் படிக்கிறான். அவன் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. இதை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்க முடிவு செய்தான். மற்ற நண்பர்களுடன் ஆலோசித்து பகுதி நேர வேலை செய்து (கார் சுத்தம் செய்வது, ஐஸ்கிரீம், பிட்சா விற்பது) போன்ற வேலைகளை செய்து பணம் திரட்டி வருகிறான். . “தண்ணீருக்காக பெண்கள் பல மைல்கள் தலையில் பானையை சுமந்து சென்றதை பார்த்து இந்த பிரச்சினை பற்றிய சிந்தனை வந்தது. இந்த வேலையில் வெற்றி பெறும் வரை வேலைகளில் ஈடுபடுவேன்" என்கிறான் இவன்.

0 மறுமொழிகள்: