நல்லசேதி 30-01-2008

பத்தாயிரம் கிராமங்கள் இஸ்ரோவினால் விண்வெளி நுட்பத்துக்கு போகின்றன:

டெக்கான் க்ரானிகிள் ஜனவரி 30, 2008

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 4000 கிராம ப்ளாக்குகளில் கிராம வள மையங்கள் (விஆர்சி) அமைப்பதில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த 5 ஆண்டு திட்டத்துக்குள் 10, 000 அமைக்கப்பட்டுவிடும். மற்றபடி அணுக இயலாத கிராமங்கள் இதனால் தொடர்ப்புக்கு வந்து விடும். செய்திகள், வேளான் சேவைகள், தொலைதூர மருத்துவம், படிப்பறிவு நடவடிக்கைகள் ஆகியன இதனால் சாத்தியப்படும்.
இப்போது ஏறத்தாழ 30,000 மெய்நிகர் வகுப்பறைகள் உள்ளன. 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றன. இதை 3 கோடி கிராம குழந்தைகளுக்கும் கிடைக்கும்படி செய்வதே இத்திட்டத்தின் ஒரு நோக்கம். தமிழ்நாட்டில் திருவையாறு, செம்பட்டி, தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் வானிலை, நீர்வள மேலாண்மை, இயற்கை விவசாயம், மீன்பிடிக்க தகுந்த இடங்கள் அறிதல் ஆகிய சேவைகளை அளித்து வருகின்றன.
இவை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் மற்றும் விஆர்சி திட்ட அமைப்பாளர் டாக்டர் ஹெக்டே அவர்களால் டெக்கான் க்ரானிகிள்- இக்கு பேட்டி ஒன்றில் சொல்லப்பட்டது.

0 மறுமொழிகள்: