நல்ல சேதி-3 31 ஜனவரி

தினமலர் 31 ஜனவரி கடலூர் இணைப்பு பக்கம்1
செங்கால் ஓடை பிரச்சினையில் விவசாயிகளுக்கு விடிவுக்காலம்!

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு நீர் வரும் செங்கால் ஓடை 30 இலட்சம் செலவில் தூர் வாரப்பட்டு வருகிறது. இது பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. 2005 இல் கொஞ்சம் தூர் வாரப்பட்டு ஆக்கிரமிப்பு பிரச்சினைகளால் நின்று போனது.
மழைக்காலங்களில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை கள்ளாத்தூர், செந்துறை உட்பட பல பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த ஓடை வழியே தான் ஏரிக்கு வரும். தூர் வாரப்படாமல் இந்த நீர் சித்தமல்லி அகரபுத்தூர், பா.புத்தூர், கருணாகர நல்லூர் ஆகிய கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்தது.
இப்போது ராஷ்ட்ரீய சம்விகாஸ் யோஜனா திட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி துவங்கி

நடைபெற்று வருகிறது.
சுமார் 20,000 ஏக்கர் நிலம் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்படும் என்று தெரிகிறது.

0 மறுமொழிகள்: