இந்தியா ஒளிர்கிறது!

இந்த தலைப்பு நிறைய பேருக்கு பிடிக்காதது என்று தெரியும். ஆகவே முதலில் இது எந்த கட்சியை சார்ந்தும் இல்லை என்று சொல்லி விடுகிறேன்.

நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன.
துரியோதனன் போல கெட்டதையே பார்க்கலாம்.
அல்லது தருமன் போல நல்லதையே பார்க்கலாம்.
அல்லது எதார்த்தமாக பார்க்கலாம்.

ஊடகங்கள் வியாபாரமாக இயங்க மக்களின் மலினமான உணர்வுகளுக்கு தீனி போடுகின்றன. அப்போதுதானே நிறைய பேர் படிப்பார்கள்! அதனால் அவை தரும் செய்திகள் ஒரு மாதிரிதான் இருக்கும்.

எதார்த்தமாக பார்க்கும்போது நாம் பல விஷயங்களில் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றுக்கு அரசாங்கங்கள் காரணம் என்று குறை சொல்ல முடியாது. முன்னேறம் மக்களால்தான் ஏற்படுகிறது. அரசுகள் ஒரு ஊக்கியாக மட்டுமே இருக்க முடியும். முன்னேற மக்களுக்கு முதலில் ஒரு தன்னம்பிக்கை தேவை. "ப்ளடி இன்டியா" என்று நினைக்கும்வரை நாம் முன்னேற முடியாது. அதற்குத்தான் இந்த தலைப்பு.

தப்பித்தவறி ஊடகங்களில் சில நல்ல விஷயங்கள் வந்து விடுகின்றன. இவை இந்தியாவின் ஏதோ ஒரு அங்கம் முன்னேறியதை காட்டும். அவற்றையும்தான் தெரிந்து கொள்ளலாமே!

--------------
வெளி நாடுகளில் இருந்து இந்தியா எல்லாவற்றையும் இறக்குமதி செய்த காலம் போயே போச்! திசம்பர் 12 ஆம் தேதியிட்ட செய்திகள் மஹீந்திரா ஸ்கார்ப்பியோ வண்டிக்கு வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 285 இடங்களில் அவை விற்கப்பட உள்ளன. 45,000 வண்டிகளுக்கு இப்போதே ஆர்டர்கள் உள்ளன.

0 மறுமொழிகள்: