செவ்வாய், ஜனவரி 22, 2008

நல்ல சேதி-1- 22-1-2008

கழுத்தில் தாலி; கையில் பாட புத்தகம்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற கல்வி திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப் படுத்தியது. ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களில் கல்வி அறிவு இல்லாத பெண் குழந்தைகள் குறித்து வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் நிலைக்கு ஏற்ப 6, 7 அல்லது 8 ஆம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 5,600 பேர். அவர்களில் 64 பேர் திருமணம் ஆனவர்கள் என தெரிய வந்தது. இவர்களுக்கு கல்வி அறிவு தருவதைப்பற்றி மட்டும் கவனம் செலுத்தப்படும்; அவர்கள் மண விஷயத்தை ஆலோசிக்கப்போவதில்லை; அது அவர்கள் படிப்பை பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் 22-1-2008 புதுவை பக்கம்2

0 மறுமொழிகள்: