நல்ல சேதி-2- 22-1-2008

சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' விழா. இந்தியாவை மாற்ற கலாம் காட்டினார் புதிய வழி:
இளைஞர்கள் தொழில் முனைவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் கலாம்.
"பொறுப்பான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார் கலாம்.....என் வாழ்க்கையை குறும்படமாக எடுத்துள்ளனர். மற்றவர் என்னை உதாரணமாக கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனாலும் ஒரு சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும்; ஆன்மீகம் உணர்ந்த நிறைந்த வாழ்க்கையில் தான் முழு திருப்தி காண இயலும் என்ற சம நிலைக்கு வரக்கூடும் என நான் நம்புகிறேன்....மன எழுச்சி அடைந்த 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறையினர் எழுச்சி பெற வேன்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்.

சிறகு பவுண்டேஷன் இன் திட்டத்தின் கீழ் 99 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி தரப்படும். சர்வ தேச தரத்தில் இந்தியாவிலிருந்தும் மற்றும் உலகளாவிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு இது நிறைவேற்றப்படும்..... தேவையான செய்முறை பயிற்சி அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மூலம் அளிக்க வேண்டும்...”

மேலும் தகவல்களுக்கு தினமலர் 22-1-2008 புதுவை பக்கம் 5

0 மறுமொழிகள்: