மற்றவர் பங்களிப்பு

25-8-2006 இல் பஞ்சாபில் பல பிஹாரி தொழிலாளிகள் கட்டாய அடையாள அட்டை மற்றும் உழைக்க பெர்மிட் ஆகியவற்றை எதிர்த்து போராட, லூதியானாவில் போலீஸுடன் கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமுற்றனர். நிதிஷ் உடனடியாக பஞ்சாபில் அப்போது முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உடனும் உள்துறை இலாகா மந்திரி சிவராஜ் பாடிலுடனும் பேசினார். பிஹார் எம் எல் ஏக்கள் 3 பேர் அடங்கிய குழு உடனடியாக லூதியானாவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள். வேலை பெர்மிட் உத்தரவு இரத்து செய்யப்பட்டது. பிரச்சினை எவ்வளவு விரைவாக தீர்க்கப்பட்டது எனில் நாட்டில் இது முதல் பக்க பத்திரிகை செய்தியாகக்கூட ஆகவில்லை. எப்படி உடனடி தெளிவான முடிவுகளை தலைமை எடுப்பதால் மோசமான விளைவுகள் தடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.



பஞ்சாமிர்தம் என்ற குழு மடலில் இருந்து.

0 மறுமொழிகள்: