இயற்கை உரங்களால் நெல் விளைச்சல் அதிகரிப்பு

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் அதிக நெல் பயிரிடும் பகுதி. இங்குள்ள வடக்கன்சேரி பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் 20 பேர் வடக்கன்சேரிபாத சேகர சமிதி என்ற அமைப்பை துவக்கியுள்ளனர். பல ஆண்டுகளாக நெல் பயிரிட்டுவரும் இவர்கள் இந்த முறை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளை கைவிட்டு இயற்கை உர சாகுபடிக்கு மாறினர். இப்போது அருவடை நடக்கிறது. ஏக்கருக்கு 4 டன் விளைந்துள்ளது. (வழக்கமாக 3.5 டன்) இதை கேரளாவை சேர்ந்த போப்ஸ் நிறுவனம் அதிக விலையாக குவிண்டாலுக்கு ரூ.1125 கொடுத்து வாங்குகிறது. (இரண்டு வருடம் முன் 420, போன வருடம் அரசு நிர்ணயித்த ஆதரவு விலை 900.)
விவரமான தகவல் : தினமலர் புதுவை பதிப்பு 20-02-2008 பக்கம் 2

0 மறுமொழிகள்: