தொழிலில் புதுமை புகுத்தும் பெண்கள் பட்டியலில் இந்தியாவின் பத்மஸ்ரீ

அமெரிக்காவில் புதுமைகள் மூலம் சாதனை படைக்கும் பெண்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த பத்மஸ்ரீ வாரியரும் இடம் பெற்று உள்ளார்.
மலையாளியாக பிறந்து ஆந்திராவில் வளர்ந்தவர். தில்லி ஐஐடி யில் ரசாயன இஞ்சினீரிங்கும் கார்னெல் பல்கலையில் எம் எஸ் உம் பெற்றார். கடந்த ஆண்டு வரை மோட்டொரோலோ வில் தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக பணி புரிந்தார். இப்போது சிஸ்கோ. இவரது புதுமையான அணுகு முறைகள் மூலம் நிறுவனங்களின் லாபம் அதிகமாயிற்று. புதுமை மட்டும் அல்லாது அதிக சம்பளம் பெறும் பட்டியலிலும் இவர் இருக்கிறார். பிரபல அமெரிக்க பிங்க் பத்திரிகை வெளியிட்ட புதுமையான அணுகு முறையால் அதிக வருவாய் ஈட்டுவோர் பட்டியலில் 15 பேரில்
இவர் உள்ளார்.

தினமலர் 19-02-2008 புதுவை பக்கம்14

0 மறுமொழிகள்: