இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு....

இந்திய சயன்ஸ் காங்கிரஸ் விவசாயத்துறைக்கு ஒரு முழு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இது பற்றி கூறும்போது ஜனவரி 3-7 இல் விசாகையில் இ.ச.க வின் 95 ஆம் அமர்வில் பிரதமர் தெரிவித்த கவலைகளை இது கவனத்தில் கொண்டுள்ளது என்றார். இதன்படி ஒரு தேசிய விவசாயிகள் பங்கு கொள்ளும் ஆராய்சி இணையம் உருவாக்கப்படும். எப்போதும் பசுமையாக இருக்க திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயிகள், கொள்கை உருவாக்குவோர், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் எல்லா வேளான் கல்லூரிகளும் இதில் பங்கு வகிப்பர். இது மட்டும் இன்றி இஸ்ரோ ஐகார் ஐஐடிகள், போன்ற நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு.
விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் "மேலும் வருமானம் தேடி ஆண்கள் நகர்புறங்களுக்கு செல்வதால் விவசாயம் பெண்கள் சார்ந்ததாக ஆகி வருகிறது. ஆகவே உணவு பாதுகாப்பு என்பது பெண்களின் பலத்தை அதிகரிப்பதில் உள்ளது. திட்டத்தில் பெண் விவசாயிகளுக்காக 9 அம்ச துணை திட்டம் உண்டு என்றார்.
http://www.deccan.com/chennaichronicle/City/CityNews.asp

0 மறுமொழிகள்: