நல்ல சேதி-1 05-02-2008

இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள் அதிக அளவில் இருந்தாலும் அவற்றின் பேடன்ட் உரிமை பதிவு செய்யவோ அல்லது அதை வெற்றிகரமாக சந்தைப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டுள்லது.
அசாம் மாநில முகமது உசேன் பழைய டயர் மற்றும் மூங்கிலைக்கொண்டு குறைந்த செலவில் காற்றாலையை வடிவமைத்து உள்ளார். கஷ்மீர் முஸ்டாக் அகமது தார் மரங்களில் வேகமாக ஏற கருவி கண்டு பிடித்தார். கையில் எடுத்துச்செல்லக்கூடிய இந்த கருவியை பயன்படுத்தி 50 அடி உயரத்தை 5 நிமிஷத்தில் ஏறிவிடலாம். ஆனால் இதை யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. தமிழக முருகானந்தம் மினி சானிட்டரி நாப்கின் தயாரிக்க கருவி கண்டுபிடித்தார். இதன் மூலம் தயாரிக்கும் நாப்கின் விலை ஒரு ரூபாய் மட்டுமே.
இப்படி ஏராளமான திறமை இருந்தும் பயனாகாத நிலையை தடுக்க தடைகள் பேடன்ட் பதிவு செய்ய தெரியாததும் முடியாததும் நிதி ஆதாரம் திரட்ட முடியாததும்தான்.
இந்தியாவில் 2002 இல் 9000 விண்ணப்பங்கள் பேடன்ட் பதிவுக்கு வந்தன. அதே சமயம் சீனாவில் 80,000. அமேரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகம்.

ஐ.ஐ.எம்.ஏ பேராசிரியர் அனில் குப்தா கூறியதாவது:
அந்த குறையை போக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. கண்டு பிடிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்படும். நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியும் தரப்படும். இத்தகைய மையங்கள் 200 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.
தொடுப்பு: http://www.nif.org.in/

தினமலர் 05-02-2008 புதுவை பதிப்பு பக்கம் 4

0 மறுமொழிகள்: