நல்ல சேதி -3 06-02-2008

ரயில் பயணிகளிடம் கண்டபடி கட்டணம் வசூலிப்பதா?

ரயில்வேக்கு பிரதமர் அலுவலகம் கண்டிப்பு.

2001 ஆண்டு ரயில் பாதுகாப்பு தொடர்பாக கமிட்டி ஒன்று பரிந்துரைத்ததை அடுத்து அவற்றை நிறைவேற்ற 17,000 கோடி ரூபாய் தேவை என முடிவானது. பட்ஜெட் மூலமாக 12,000 கோடியும் மீதியை பயணிகளிடம் பாதுகாப்பு கட்டணம் என்றும் வசூலிக்க முடிவானது.
இதன்படி கடந்த மார்ச் 31 வரை அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னும் அக்கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுவதை பார்லிமென்ட் ஆய்வுக்கமிட்டி சமீபத்தில் கண்டுபிடித்தது. அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டி வளர்ச்சி கட்டணம் என்று அதை வசூலிப்பதை தவறு என அக்குழு கண்டித்து உள்ளது. இந்த அறிக்கையை பார்த்து பிரதமர் அலுவலகமும் ரயில்வேயை கண்டித்து உள்ளது. இதை அடுத்து இந்த மார்ச் 31 உடன் (1000 கோடி வசூலித்த பின்னர்) இத்திட்டம் கைவிடப்படும்.....

தினமலர் புதுவை 06-02-2008 பக்கம் 1

0 மறுமொழிகள்: